ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணமா.? இரண்டு குடும்பத்தினர் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை…

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி திருமணம் செய்திருக்கும் அவருடைய மனைவி ஆர்த்தி, நடிகையும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவருமான நடிகை சுஜாதா விஜயகுமாரின் மகள். ஜெயம் ரவி திருமணத்திற்கு பின்பு வீட்டோடு மாப்பிள்ளையாகவே மாறிவிட்டார் என்றே சொல்லும் அளவுக்கு முழுக்க முழுக்க மாமியார் கட்டுப்பாட்டில் வந்துள்ளார்.

அதாவது ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் கால்ஷீட் முதல் அவருடைய சம்பளம் வரை அனைத்தும் அவருடைய மாமியாரே முடிவு செய்யத் தொடங்கினார். குறிப்பாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை தயாரித்த அவருடைய மாமியார் மருமகன் ஜெயம் ரவிக்கு அவர் கொடுப்பது தான் சம்பளம் என்கின்ற ஒரு நிலைக்கு ஜெயம் ரவியை கொண்டு வந்தார். மேலும் ஜெயம் ரவி சுதந்திரமாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத அளவுக்கு அவருடைய மாமியார் அட்ராசிட்டி எல்லை மீறி உள்ளது என்கிற தகவல் பரவலாகவே சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

அதாவது ஜெயம் ரவி சொந்த அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திற்கு கால் சீட் ஜெயம் ரவியால் கொடுக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய தடையாக இருந்துள்ளார் மாமியார் சுஜாதா விஜயகுமார். இது அனைத்தும் ஜெயம் ரவியின் தந்தை மற்றும் அவருடைய அண்ணனுக்கு வேதனையை கொடுத்தாலும், ஜெயம் ரவி சந்தோசமாக இருந்தால் போதும் என அமைதியாக இருந்து வந்துள்ளனர்.

ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் தன்னை சுற்றி கட்டப்பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைக்கும் வகையில் கோபத்தில் கொந்தளித்து, சுதந்திரமாக முடிவெடுக்கும் வகையில் இனி தன்னுடைய படத்தின் கால் சீட் சம்பளம், எந்த தயாரிப்பில் நடிக்க வேண்டும் என சுயமாக தான் நான் முடிவெடுக்க போகிறேன் என்கின்ற நிலைக்கு வந்தார்,

இதனால் ஜெயம் ரவிக்கு அவருடைய மாமியாருக்கும் உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன் தாய் மீது அதிக பாசம் கொண்ட ஆர்த்தி அம்மாவுக்கு ஆதரவாக ஜெயம் ரவி உடன் அவ்வப்போது பிரட்சனை செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாக வெடிக்க மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து விடவேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் ஜெயம் ரவி என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்கும் திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவிக்கு ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌதர்யாவை திருமணம் செய்து வைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் குடும்பத்திற்கும், ஜெயம் ரவி குடும்பத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது சினிமாவில் நல்ல ஒழுக்கமான பையனாக ஜெயம் ரவி இருக்கிறார், அவருடைய குடும்ப பின்னணியும் மிகவும் ஒழுக்கமாக உள்ளது, மேலும் ஜெயம் ரவிக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உள்ளது அந்த வகையில் இந்த பையனுக்கு ரஜினிகாந்த் இரண்டாவது மகளை திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என ரஜினிகாந்த் குடும்பத்தினர் விரும்பியதாகவும், இது தொடர்பாக ஜெயம் ரவி தந்தையிடம் ரஜினி குடும்பம் தரப்பில் இருந்து பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எடிட்டர் மோகன் மகன் ஜெயம் ரவியிடம் பேசிய போது, தான் நடிகை சுஜாதா விஜயகுமர் மகள் ஆர்த்தியை காதலிப்பதாக தெரிவித்த ஜெயம் ரவி, அவரை தான் திருமணம் செய்யவேன் என பிடிவாதம் பிடித்துள்ளார். ஆரம்பத்தில் ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்வதற்கு எடிட்டர் மோகன் சம்மதம் தெரிவிக்கவில்லை, இருந்தாலும் ஜெயம் ரவி ஆர்த்தியை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி மகனின் விருப்பத்தின் படியே நடக்கட்டும் என ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணத்திற்கு ஜெயம் ரவி தந்தை சம்மதம் தெரிந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here