தனி பங்களா .. பெண் பாடகி உடன் ஜெயம் ரவி அஜால் குஜால்… கையும் களவுமாக பிடித்த மனைவி ஆர்த்தி…

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையில் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியா ஆர்த்தியை விட்டு ஜெயம் ரவி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியின் திருமண உறவில் இருந்து தான் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் ஜெயம் ரவி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு தன்னிடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யவில்லை என்றும், இதனால் தானும் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளோம் என்று ஒரு அறிக்கையை ஆர்த்தி வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் ஆர்த்தி பிரிவுக்கு இடையில் யார் என்கின்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், இது குறித்து பல ரகசிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது பிரபல பாடகி கேனிக்ஸா, இவர் பெங்களூரில் பூர்விகமாக கொண்ட தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவர். லண்டனில் இசை படிப்புகளை முடித்து துபாய் மற்றும் பல வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தி வருகின்றவர்.

இந்நிலையில் கேனிஷா சென்னையில் சத்யம் திரையரங்கில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் ஜெயம் ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் தான் முதன் முதலில் கேனிக்ஸாவும் ஜெயம் ரவியும் சந்தித்து கொள்கிறார்கள். அன்று இரவே சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் கேனிஷா கலந்துகொள்ளும் இரவு பார்ட்டி நடைபெறுகிறது, அந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் சினிமா துறையைச் சார்ந்த ஜீவா போன்ற பல நடிகர்கள் பங்கே இருக்கிறார்கள்.

அப்போது ஜெயம் ரவியும் கேனிக்ஸாவும் நீண்ட நேரம் பேசி ஒருவர் ஒருவரை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் பின்பு ஜெயம் ரவிக்கும் கேனிஷா ஒரு ஆழமான நட்பு தொடங்க ஆரம்பித்துள்ளது. பொதுவாகவே கேனிஷா பாடகி மட்டுமல்லாமல் ஆன்மீகம் தொடர்பாக நல்ல பேசக் கூடியவர். கேனிஷா பேச்சுக்களை கேட்ட ரெம்ப இம்ப்ரெஸ் அடுக்குகிறார் ஜெயம் ரவி.

ஏற்கனவே ஜெயம் ரவி வீட்டில் அவருடைய மனைவி உடன் சில கருத்து வேறுபாடு காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஜெயம் ரவிக்கு ஆறுதலாக இருந்துள்ளது கேனிஷா பேசிய பேச்சுக்கள். இதனை தொடர்ந்து கேனிஷா உடன் நேரம் செலவு செய்வது, அவருடன் பேசுவது மனதுக்கு ஆறுதலாக, கவலை மறந்து சந்தோசமாக இருக்கிறது என்பதால், அடிக்கடி கேனிஷா இருக்கும் கோவாவிற்கு பறந்துள்ளார் ஜெயம் ரவி.

கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை விட்டு விலகி கேனிஷாவிடம் நெருக்கமாக இருக்க தொடங்கிய ஜெயம் ரவி, கோவாவில் இருவரும் ஒரே பங்களாவில் தங்கும் அளவுக்கு இவர்களின் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் கணவர் மீது சதேகம் வர தொடங்கிய ஆர்த்திக்கு, கணவரின் நடவடிக்கைகளை வேவு பார்க்க தொடங்கியுள்ளார், அப்போது தான், ஜெயம் ரவி பாடகி கேனிஷா உடன் கோவாவில் அஜால் குஜால் வாழ்க்கை வாழ்வது தெரிய வந்துள்ளது.

இதன் பின்பே ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஆர்த்தி ஜெயம் ரவியிடம் பேசி சாமரசம் செய்ய முயற்சித்துள்ளார், ஆனால் கேனிஷா அன்பில் அரவணைப்பில் இருக்கும் ஜெயம் ரவி அதற்கான வாய்ப்பை கொடுக்கமால், தன்னுடைய திருமண உறவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு தன்னுடைய பிரிவை அறிவித்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here