ஜெயம் ரவியை டேமேஜ் செய்ய தர லோக்கலாக இறங்கிய ஆர்த்தி குடும்பம்… அட கடவுளே… இப்படியும் செய்வார்களா.?

0
Follow on Google News

ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான பின்பு தொடர்ந்து ஜெயம் ரவி பியை முழுவதுமாக டேமேஜ் செய்து சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் ஆக்கி விட வேண்டும் என்பதற்காக தர லோக்கலாக இறங்கி ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி குடும்பத்தினர் செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது சில சேனல்களுக்கு பணம் கொடுத்து ஆர்த்தி யார் தெரியுமா.? அவர் பிறக்கும்போதே மிகப்பெரிய கோடீஸ்வரர் குடும்பம். அவருடைய மாமியார் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கிறார். அவர்களுக்கு கொடைக்கானலில் பல கோடிக்கு சொத்து இருக்கிறது. ஊட்டியில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது இப்படி எல்லாம் பணம் கொடுத்து ஆர்த்தி குடும்பத்தினர் தங்களை பில்டப் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் உண்மையிலேயே இவர்கள் பணக்காரர் குடும்பம் என்றால் இதுவரை ஜெயம் ரவியை வைத்து தான் இவர்கள் குடும்பம் வளர்ச்சியும் அடைந்திருக்கிறது வருமானமும் ஈட்டி இருக்கிறது என்கின்றனர் சினிமா வட்டாரம். அதாவது ஜெயம் ரவி மாமியாருக்கும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கும் அங்கீகாரம் என்பது ஜெயம் ரவியின் மாமியார், ஜெயம் ரவியின் மனைவி என்பதால் தான் கிடைத்தது. ஜெயம் ரவி இல்லாமல் சினிமா துறையில் அவர்களுக்கென தனி அங்கீகாரம் இல்லை.

ஒரு சினிமா பொது நிகழ்ச்சிக்கு சென்றால் கூட ஜெயம் ரவியின் மனைவி ஜெயம் ரவியின் மாமியார் என்பதற்காக இவர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும், இல்லையென்றால் அவர்களுக்கு ஏற்றார் போன்று தான் மரியாதை கிடைக்கும். அந்த வகையில் பல கொடுமைகளை அனுபவித்து இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று வெளியே வர இருக்கும் ஜெயம் ரவியை நிம்மதியாக இனிமேலாவது வாழ விடுவார்கள் என்றால் அதற்கான வாய்ப்பை நாங்கள் தரவே மாட்டோம் என்பது போன்று பல வேலைகளை செய்து வருகிறார்கள் ஜெயம் ரவி மாமியார் தரப்பினர்.

அப்படித்தான் கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த ஜெயம் ரவி தன்னுடைய மன நிம்மதிக்காக கோவாவில் உள்ள கேணிக்ஷாவிடம் ஹீலிங் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் ஜெயம் ரவியுடன் கேனிஷா இருக்கும் புகைப்படத்தை ஆர்த்தி தரப்பினர் வெளியிட்டு ஜெயம் ரவிக்கும் அந்தப் பாடகிக்கும் தொடர்பு என்பது போன்று ஒரு செய்தியை பரவ விட்டு, ஜெயம் ரவி மனைவிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி ஜெயம் ரவி இமேஜை டேமேஜ் செய்ய முயற்சித்துள்ளார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போன்று ஒரு குரூப் செயல்பட தொடங்கியுள்ளது. அந்த குரூப் பின்னணியில் ஜெயம் ரவி மாமியார் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி எப்படி எல்லாம் எந்த பெண்ணுடன் நெருங்கி இருக்கும் புகைப்படத்தை வைத்து அவருடைய இமேஜை டேமேஜ் செய்யலாம் என்று அந்த குரூப் வேலை செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு எதிராக , அவரை ஒரு பெண் பித்தகர் போன்று சித்தரிக்க நினைத்து வேலை செய்தால் அது ஜெயம் ரவிக்கு ஆபத்து இல்லை, அதை செய்கின்றவர்களுக்கு தான் ஆபத்தாக முடியும் , ஏனெற்றால் ஜெயம் ரவி ஏற்கனவே மற்ற நடிகர்கள் போன்று பெண்கள் விஷயத்தில் கிசுகிசுவில் இருந்தால் அவரைப் ஒரு பெண்ணை தொடர்பு படுத்தி பேசும்பொழுது மக்கள் எளிதாக நம்பி விடுவார்கள்.

ஆனால் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் மிக ஒழுக்கமான நடிகர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் அவர் ஒருவர். அப்படி இருக்கறையில் அவரை பெண் பித்தகர் என்பது போன்று சித்தரித்து விட்டால் அவர் இமேஜை டேமேஜ் செய்து காலி செய்துவிடலாம் என்று ஒரு தரப்பினர் செயல்படுவது, அது மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் உண்மையாக காதலித்து இருந்தால் தன்னுடைய கணவன் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும், தன்னுடைய மனைவி எங்கிருந்தால் நன்றாக வாழட்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படித்தான் இதற்கு முன்பு தனுஷ் ஐஸ்வர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி ஆகியோர் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்த பின்பு அவர்களுக்குள் எந்த ஒரு குற்றச்சாட்டும் தெரிவிக்கவில்லை

அது எதிர்காலத்தில் அவர்கள் மீண்டும் இணைவதற்கு கூட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும், ஆனால் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி மாமியார் இருவரும் ஜெயம் ரவிக்கு எதிராக பல வேலைகளை செய்வது மேலும் ஜெயம் ரவிக்கு இவர்கள் மீது வெறுப்பு தான் ஏற்பட்டுவிடும் அந்த வகையில் இனி வரும் காலத்தில் ஜெயம் ரவி முற்றிலுமாக இவர்களை புறக்கணித்து விடுவார் என்றே கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here