தவிக்கும் ஜெயம் ரவி – ஆர்த்தி குழந்தைகள்… அம்மா பக்கம் போவதா.? அப்பா பக்கம் போவதா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். ஆனால் இது ஜெயம் ரவி பிரிவதாக தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும் இதுகுறித்து தன்னிடம் எதுவுமே ஆலோசிக்கவில்லை என தெரிவித்த அவருடைய மனைவி ஆர்த்தி. அவர் என்னை விட்டு பிரிவதாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிவிப்பை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

நான் பலமுறை அவரிடம் பேச முயற்சித்தும் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என்றும், மேலும் இதனால் தானும் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் குழம்பித் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. அந்த வகையில் இதற்கு முன்பு தங்களுடைய பிரிவை அறிந்த சினிமா துறையைச் சார்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா- நாகச்சந்தையா, ஜிவி பிரசாத் – சைந்தவி போன்றோர் ஒருமனதாக பிரிந்த நிலையில்,

ஜெயம் ரவி அவருடைய திருமண உறவை முறித்துக் கொள்வதில் கூட அவருக்கும் அவருடைய மனைவிக்கும் முரண்பாடு உள்ளது. அதாவது ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிய முடிவு செய்தாலும் அவருடைய மனைவிக்கு ஜெயம் ரவியை விட்டு பிரிவதற்கு விருப்பமில்லை என்பதே ஜெயம் ரவி மனைவி வெளியிட்ட அறிக்கை மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில் ஜெயம் ரவி சட்டப்படி விவாகரத்து வாங்குவதில் கூட கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எளிதாக விவாகரத்து பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஒருமனதாக பிரிந்தாலும் கூட அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தந்தையிடமும் அம்மாவிடமும் தங்களுடைய பாசத்தை பகிர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் அதிகமாக நடிகர் தனுசுடன் தான் அவருடைய இரண்டு குழந்தைகளும் நெருக்கமாகவும் அடிக்கடி வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருவதையும் பார்க்க முடியுது. இதற்கு முக்கிய காரணம் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே ஒரு மனதாக பிரிவதற்கு முன்பு அவர்கள் இருவரும் பேசி சில ஒப்பந்தங்கள் போட்டிருக்கக்கூடும், அதாவது நம்மளுடைய பிரிவு நம்முடைய குழந்தைகளை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.

அந்த வகையில் குழந்தையை யாரும் யாரும் கட்டுப்படுத்த வேண்டாம் என்கின்ற சில ஒப்பந்தங்கள் போட்டு இவர்கள் பிரிந்திருப்பதால் இரண்டு குழந்தைகளும் தந்தை தனுஷிடம் செல்வதற்கு ஐஸ்வர்யாவும் தடையாக இல்லை. அதே போன்று இரண்டு குழந்தைகள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கும் அவருடைய தந்தை தனுஷ் தடையாக இல்லை என்பதை நடக்கும் நிகழ்வுகளை பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் பிரிவதில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதால் அவருடைய இரண்டு குழந்தைகள் தற்பொழுது தாய் ஆர்த்தி கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர் ஜெயம் ரவியை பார்ப்பதற்கு அவருடைய இரண்டு குழந்தைகளை அனுமதிப்பாரா அல்லது தன்னுடைய இரண்டு குழந்தைகளைப் பிரிந்து ஜெயம் ரவியால் வாழ முடியுமா என்கின்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

அதனால் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி பிரிவில் இடையில் சிக்கி தவித்து வருவது அவருடைய இரண்டு குழந்தைகள் தான். காரணம் எந்த ஒரு குழந்தையும் அம்மா வேண்டாம் அப்பா தான் வேண்டும், அப்பா வேண்டாம் அம்மா தான் வேண்டும் என்கின்ற முடிவை எளிதாக எடுத்து விட முடியாது. அதுவும் ஜெயம் ரவியின் இரண்டு குழந்தைகளும் ஓரளவு வளர்ந்து வெளியுலகம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நிச்சயம் ஜெயம் ரவியின் குழந்தைகள் விருப்பப்பட்டு அவருடைய தந்தையை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் கூட அவருடைய தாய் விடுவாரா.? என்கின்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஆர்த்தி தனது அறிக்கையில் தானும் தன்னுடைய குழந்தையும் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளதை வைத்து தன்னுடைய குழந்தை தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறார். அந்த வகையில் ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு இருக்கும் கோபத்தின் காரணமாக தன்னுடைய குழந்தைகள் தந்தையை பார்க்க விருப்பப்பட்டாலும் ஜெயம் ரவி மனைவி அனுமதிப்பதில் சந்தேகம் தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here