விவாகரத்துக்கு காரணமான Night Party… ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரத்தில் வெடிக்கும் அடுத்தடுத்து பூகம்பம்…

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருடைய விவாகரத்து அடுத்தடுத்து பல பூகம்பங்களை தமிழ் சினிமா வட்டாரத்தில் வெடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது சமீப காலமாகவே தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் உள்ள நட்சத்திர தம்பதிகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருவதால், இதன் பின்னணி என்ன என்பது குறித்து தற்பொழுது பல்வேறு விவாதங்கள் தமிழ் சினிமா வட்டாரங்களில் நடந்து வருகிறது.

பொதுவாகவே தமிழ் சினிமா துறையினர் மத்தியில் அரங்கேறி வரும் விவாகரத்திற்கும், மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமே தமிழ் சினிமா துறையினர் பங்கேற்கும் நைட் பார்ட்டி தான் என்று கூறப்படுகிறது. அதாவது நைட் பார்ட்டி என்பது சினிமா துறையினர் ஏதோ புதிதாக தற்பொழுது கொண்டாடும் பார்ட்டி அல்ல.

இதற்கு முன்பு அந்த காலத்தில் ஒரு மூத்த நடிகர் அவருடைய வீட்டில் ஒரு பார் செட் ஆப் வைத்து அதில் அந்த காலகட்டத்திலேயே சினிமா துறையை சார்ந்தவர்கள் நைட் பாட்டில் கொண்டாடும் வழக்கம் உண்டு. அப்படி நடந்த பார்ட்டியில் பல பிரச்சனைகள் வெடித்த வரலாறும் உண்டு. இந்த நிலையில் இன்றைய நவீன சினிமா உலகில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கொண்டாடும் நைட் பார்ட்டி என்பது சினிமா துறையினர்களுக்கு அது ஒரு தனி உலகம்.

ஆனால் இதுபோன்ற நைட் பார்ட்டிகளில் தான் பல்வேறு தவறான அணுகுமுறைக்கு வழி வகுக்க காரணமாகவும் இருக்கிறது. மேலும் ஒரு சில நடிகர்கள் தங்கள் வீட்டிலே ஒரு பார் செட் ஆப் வைத்துக் கொள்கிறார்கள். அந்த வீட்டிலே இருக்கும் பாருக்கு நைட் பார்ட்டி ஏற்பாடு செய்கிறார்கள். அப்படி நைட் பார்ட்டி ஏற்பாடு செய்யும் பொழுது சில தவறான பழக்கவழக்கங்களுக்கு உள்ளாகிறார்கள்.

இதுவே சினிமா துறையினர் குடும்பத்தினர் மத்தியில் விவாகரத்து வரை கொண்டு சென்று விட்டு விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் விவாகரத்துக்கு தள்ளப்படுவதற்கு இந்த வீக் எண்டு நைட்டு பார்ட்டி ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாத. ஆனால் நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி இவர்களுடைய விவாகரத்துக்கு இந்த இரவு இரவு பார்ட்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் பெரும்பாலும் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி இருவர் குறித்து எந்த ஒரு தவறான கிசுகிசு இதுவரை எந்த ஒரு ஊடகங்களிலும் வந்தது கிடையாது. அந்த வகையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு முக்கிய காரணமே அவர்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது பல தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்றாக ஜெயம் ரவி என்னதான் எந்த ஒரு நடிகையின் கிசுகிசு இல்லாமல் சினிமா துறையில் இருந்தாலும் அவருடைய மனைவி தொடர்ந்து ஜெயம் ரவி மீது சந்தேகப்படுவது.

ஸ்பை வைத்து கண்காணிப்பது இது போன்ற செயல் ஒரு கட்டத்தில் உச்ச கட்டத்தை எட்டியதும் தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதிய ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் மனைவியை வெறுக்க தொடங்கியுள்ளார். அதேபோன்று தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மாமியாரின் தலையீடு அதிகம் இருந்த காரணத்தினால் ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் வரும் வதந்தி போன்று ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு அந்த நடிகர் காரணம், இந்த நடிகை காரணம் என்றெல்லாம் துளியும் உண்மை இல்லை என உறுதியாக தெளிவுபடுத்துகிறது சினிமா வட்டாரம். இந்நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு இரவு பார்ட்டி காரணம் இல்லை என்றாலும், மற்ற சினிமா தம்பதியினர் பிரிவுக்கு இரவு பார்ட்டி ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here