திட்டமிட்டு வலையில் சிக்க வைக்கப்பட்ட ஜெயம் ரவி… மாமியார் மாஸ்டர் பிளானில் ஜெயம் ரவி சிக்கிய எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்காக வழக்கறிஞர்களை சந்தித்து விவகாரத்துக்கான வேலையை தொடங்கியுள்ளதாக வெளியான தகவல் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி திருமணத்திற்கு பின்பு அவருடைய மாமியார் கட்டுப்பாட்டில் வீட்டோடு மருமகனாக இருந்து வந்த நிலையில்,

தற்பொழுது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்த பின்பு, அவர் தன்னுடைய தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஜெயம் ரவி ஆர்த்தி திருமணம் கூட அவருடைய மாமியார் பக்காவாக செட் செய்து ஜெயம் ரவிக்கு விரித்த வலையில் ஜெயம் ரவி மாட்டிக் கொண்டதாக ஒரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சினிமா துறையில் திருமணம் ஆன நடிகைகள் சங்கம் என்கின்ற ஒரு குரூப்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது திருமணம் ஆன பழைய நடிகைகள், அடிக்கடி சந்தித்து சினிமாவில் நடக்கும் பல விஷயங்கள் பற்றி பேசி கொள்வார்களாம், இதற்கு திருமணம் ஆன நடிகை சங்கம் என்று அழைப்பார்களாம், அதாவது கிராமத்தில் பெண்கள் கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஊர் புறணி பேசுவார்கள் அல்லவா அதுபோன்று சினிமா துறை குறித்து இந்த திருமணம் ஆன நடிகைகள் சந்தித்து பேசி பகிர்ந்து கொள்வார்களாம்.

அப்படி சந்தித்து பேசும் போது சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தி திருமணம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. அப்போது சினிமாவில் மிக ஒழுக்கமான பையன், அழகான பையன், அவர் நடித்த படமும் நல்லா போகுது, அப்படி பட்ட பையன் ஜெயம் ரவியை ஆர்த்திக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அங்கிருந்த திருமணமான நடிகைகள் சங்கத்தில் பேச, சரி அதற்கு ஜெயம் ரவி குடும்பத்தினர் சம்மதிக்கணும், ஜெயம் ரவி சம்மதிக்கணுமே என அவர்களுக்குள் விவாதம் எழுந்துள்ளது.

அப்போது தான் அந்த திருமணம் ஆன நடிகைகள் சங்கம் என்று சொல்ல கூடிய அந்த நடிகைகள் சேர்ந்து ஒரு பலே திட்டம் போட்டு, முதலில் ஜெயம் ரவியுடன் ஆர்த்தியை பழக விட வேண்டும் என்று முடிவு செய்தார்களாம். இதனை தொடர்ந்து சுஜாதா விஜயகுமாருக்கு மிக நெருக்கமான ஒரு நடிகை ஆர்த்தியை ஜெயம் ரவிக்கு அறிமுகம் செய்து வைத்து இருவரும் பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

ஜெயம் ரவி – ஆர்த்தி இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமாகி அது காதலாக உருவெடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் உயிரை விட்டு விடுவேன் என்று ஜெயம் ரவியிடம் ஆரத்தி தெரிவிக்க, தான் இல்லை என்றால் உயிரையே விட்டு விடுவேன் என ஆரத்தி சொல்கிறார் என்றால் தன்னை எந்த அளவுக்கு உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார் என்று ஆர்த்தி மீது மேலும் ஜெயம் ரவிக்கு காதல் அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி தன்னுடைய தந்தையிடம் சென்று சுஜாதா விஜயகுமார் மகளை தான் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்ததும் அதற்கு அவருடைய தந்தை முடியாது என மறுத்துள்ளார், இப்படி தொடர்ந்து ஜெயம் ரவி திருமண குறித்த பிரச்சனை அவர் வீட்டில் ஓடிக் கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி அவருடைய தந்தையிடம் ஆர்த்தியை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தந்தையையே மிரட்டி உள்ளாராம்.

இதன் பின்பு ஜெயம் ரவி தந்தை நீ நல்லா இருந்தால் சரி என்று ஜெயம் ரவி ஆர்த்தி திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம் கூட அவருடைய மாமியார் உடன் இணைந்து பல திருமணமான நடிகைகள் திட்டத்தின் படி அரங்கேறியது தான் என்றும், ஆனால் திருமணத்திற்கு பின்பு மாமியார் வீட்டில் வீட்டோட மருமகனான ஜெயம் ரவி பல நேரங்களில் மாமியார் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்கிற நிலையில் வேதனையை அனுபவித்துள்ளார் பாவம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here