கருவேலமரங்களை அழித்து.. அதே இடத்தில் ஜி பி முத்து என்ன செய்கிறார் தெரியுமா.? யாரும் செய்ய துணியாத செயல்..

0
Follow on Google News

யூட்யூப் வீடியோக்களில் நகைச்சுவையாகப் பேசி பிரபலமடைந்தவர்தான் GP முத்து. எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த GP முத்து இன்று அவரது திறைமையால் கார், நிலம், சொத்து என ஏராளமானவற்றை வாங்கிக் குவிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறார். ஆம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், “ஏலே” என்ற அவரது வட்டார வழக்கில் அப்பாவி போல பேசுவதும், ரசிகர்கள் அனுப்பும் கடிதங்களை வாசித்து கிண்டலும் கேலியும் செய்வதுமாக வீடியோக்களை அப்லோட் செய்து வந்தார்.

இதனால் தனி ரசிகர் பட்டாளம் உருவாகும் அளவிற்கு பிரபலமும் அடைந்தார். அதுமட்டுமின்றி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’, ‘குக் வித் கோமாளி’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார். நகைச்சுவையான பேச்சு, பேசும் தொனி என அனைவரது கவனத்தையும் ஈர்த்த GP முத்துவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

எந்த வாய்ப்பையும் நழுவ விடக் கூடாது என்று முனைப்பு காட்டி வரும் GP முத்துவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே, நடிகர் அஜித்தின் ‘துணிவு’, சன்னி லியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ள GP முத்து அடுத்தடுத்து நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கும் GP முத்து,

அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து அடுத்தடுத்து சொத்துகளை வாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆமாங்க..கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கார் வாங்கியிருப்பதாக வீடியோவில் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு யூட்யூபில் கிடைத்த பணத்தை வைத்து பழைய கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்த ஜி.பி.முத்து, தற்போது புதிதாக கியா கேரன்ஸ் காரை வாங்கி அசத்தியுள்ளார்.

மேலும், புதிய கார் குறித்து GP முத்து வெளியிட்ட வீடியோவில், “தனது பரம்பரையிலேயே புது கார் வாங்கிய முதல் ஆள் நான் தான்” என்று பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த காரின் விலை கிட்டத்தட்ட 15 லட்சம் இருக்கும், அதில் அவரது குடும்பத்தினருடன் ஜாலியாக ரைடு சென்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இப்படி தான் சிறிது சிறிதாக சேர்த்த பணத்தில் கார் வாங்கியது மட்டுமின்றி, அவர் சொந்த ஊரான தூத்துக்குடி உடையான்குடியில் சொந்தமாக 40 சென்ட் நிலமும் வாங்கியிருக்கிறார்.

அத்துடன் அந்த நிலத்தை ஆக்கிரமித்திருந்த கருவேல மரங்கள் அனைத்தையும் வெட்டிவிட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்போவதாக GP முத்து தெரிவித்துள்ளார். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை வைத்து விவசாயம் செய்யப் போவதாகக் கூறிய GP முத்துவிற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.