நான் பார்த்து வாழ்கை கொடுத்தேன்.. இயக்குனர் வெற்றிமாறன் – தனுஷ் உச்சகட்ட மோதல்…

0
Follow on Google News

தனுஷின் கெரியரை ஒரு படி மேலே தூக்கிவிட்ட படம் என்றால் வடசென்னை படத்தை சொல்லலாம். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி, வடசென்னை படத்தில் மிகவும் சிறப்பாக பார்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்தால் அது மேஜிக் படமாக அமையும் என்றும் சொல்லப்பட்டது. இதனால்தான் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பும் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

ஆனால் தற்போது தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதால், வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கப் போவதில்லை என்றும், தனுஷ் இந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் இவர்கள் இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்சனை, ஏன் இவர்கள் வடசென்னை 2 படத்தை ஓரம்கட்டி விட்டார்கள் என்ற பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், தனது இரண்டாவது படத்திலும் தனுஷை ஹீரோவாக வைத்து ஆடுகளம் என்ற படத்தை இயக்கினார். அதன் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுசுடன் இணைந்து வடசென்னை படத்தை இயக்கினார். ஆனால் முதல் இரண்டு படங்களில் வெற்றிமாறன் சொன்னதை கேட்டு நடித்த தனுஷ், வடசென்னை படத்தில் தனது இஷ்டத்திற்கு ஏற்ப, கேரக்டர்களையும், ஸ்கிரிப்டையும் மாற்ற தொடங்கி விட்டார்.

அப்படித்தான் வெற்றிமாறன் முதலில் சிம்புவை வைத்து தான் வடசென்னை படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். இதை அறிந்த தனுஷ் உடனே வெற்றிமாறனை சந்தித்து வடசென்னை படத்தில் இடம் பிடித்தார். இருந்தும் வட சென்னை படத்தில் பல குளறுபடி செய்து வெற்றிமாறனை செம்ம டென்ஷன் ஏத்தியுள்ளார் தனுஷ். அப்போதுதான் வெற்றிமாறன் இனி தனுஷை வைத்து படம் இயக்கப் போவதில்லை என்ற முடிவையும் எடுத்திருக்கிறார்.

இருந்தும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்த தனுஷ், அதன் பிறகும் வெற்றிமாறன் இயக்கத்தில், நான் மட்டும்தான் நடிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வந்த தனுஷ், விடுதலை படத்தில் சூரி தானே நடிக்கிறார் என்று விட்டுவிட்டார். ஆனால் வெற்றிமாறன், விஜய் சேதுபதியை எல்லாம் உள்ளே கொண்டு வந்ததால், யாரை கேட்டு இப்படி செய்தீர்கள் என்றெல்லாம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இப்படி தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறனுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்ததால்தான், தற்போது தனுஷை வைத்து, வட சென்னை-2 படத்தை இயக்க வெற்றிமாறன் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என படக்குழுவினர், முதல் பாகம் வெற்றியின் போதே அறிவித்திருந்தனர். ஆனால் பல வருடங்கள் கடந்தும் அதற்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதனால் ரசிகர்கள், தனுஷ் மற்றும் வெற்றிமாறனிடம் வடசென்னை2 எப்போது என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தனர். அவ்வப்போது, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இன்னும் சில காலம் இருக்கிறது. வாடிவாசல் முடிந்ததும் தொடங்கலாம் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான், வடசென்னை2 படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இடையே மீண்டும் பிரச்சனை வெடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த பிரச்னையால் தற்போது இருவரும் எதிரும், புதிருமாக மாறிவிட்டதாகவும், இதனால் தான் வடசென்னை2 படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமலே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இருவரின் நெருங்கிய வட்டாரமும் இணைந்து பலகட்ட சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தியும், இருவருக்கும் தற்போது வரை ஒத்துப்போகவில்லை. இதனால் வடசென்னை2 படத்தினை வெற்றிமாறன் இயக்க போவதில்லை, அவருடைய உதவி இயக்குனரான கார்த்திகேயன் இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வெற்றிமாறன் – தனுஷ் இடையில் உச்சக்கட்ட மோதலுக்கு காரணம், வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான பொல்லாதவன் படத்தில் தனுஷ் நடித்து இருப்பார். இதனால் நான் தான் வெற்றிமாறனுக்கு சினிமாவில் இயக்குனர் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தேன் நான் சொல்றதற்கு வெற்றிமாறன் மறுப்பு தெரிவிக்ககூடாது என்கிற தோரணையில்ன் வெற்றிமாறனிடம் தற்பொழுது வரை அணுகி வருகிறார் தனுஷ் என்றும், இதனால் தான் வெற்றி மாறன் – தனுஷ் இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.