தனுஷ்க்கு வில்லனான செல்வராகவன்.. செண்டிமெண்ட் கலந்த ஆக்க்ஷன் படம்..

0
Follow on Google News

கடந்த வாரம் நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி மற்றும் செல்வராகவன் நடிப்பில் பகாசுரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகி நேரடியாக அண்ணன் செல்வராகவன் மற்றும் தம்பி தனுஷ் இருவரும் போட்டியில் களம் கண்டனர். இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இதில் வாத்தி படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது, அதேபோன்று தமிழில் வெளியான பகாசூரன் படத்தில் செல்வராகவனின் நடிப்பை பெரும் பாராட்டை பெற்றுள்ளது, குறிப்பாக சினிமா துறையைச் சார்ந்த முன்னணி நடிகர்கள் செல்வராகனை வெகுவாக பகாசுரன் படத்தில் அவருடைய நடிப்பிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனுஷ் – செல்வராகவன் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்தான் ஒரே தேதியில் இருவருடைய படமும் வெளியாகி உள்ளது என்று ஒரு செய்திகள் வெளியான நிலையில், தற்பொழுது தனுஷ் இயக்கும் புதிய படத்தில் செல்வராகவன் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிக்க இருக்கும் ஐம்பதாவது படத்தை அவர் சொந்தமாக இயக்குகிறார், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த ஆக்சன் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் செல்வராகவன் தனுசுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.