ரஜினிகாந்த் மொத்த சொத்தையும் ஆட்டைய போட தனுஷ் போட்ட திட்டம்..! கை நழுவியது எப்படி.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொத்த சொத்தைகளையும் தன் வசப்படுத்திக்கொள்ள தனுஷ் போட்ட திட்டம் ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா தன்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் மகள் மேலும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறது.

என்பதற்காகவே ஐஸ்வர்யாவை திருமணம் செய்தால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என தனுஷுக்கு அவருடைய தந்தை வகுத்து கொடுத்த திட்டம் தான் தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் என அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ரஜினிகாந்த் சொத்துக்கள் அனைத்தும் இரண்டு மகள்களுக்கு மட்டும் தான் என உறுதியாக இருக்கும் நிலையில் இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் திருமணத்துக்கு பின்பு தான் இரண்டு மகள்களுக்கும் சொத்து பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்பா நடிக்கும் படத்தின் சம்பளம் முதல் யாருக்கு எவ்வளவு என்கிற போட்டி இரண்டு மகள்களுக்கு இடையில் நடந்துள்ளது. இதனிடையே, ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனுஷ் உடன் இருந்த நெருக்கம் காரணமாக முதல் கணவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். இதன் பின்பு அக்கா, தங்கை இருவரையும் ஒரே வண்டியில் இரண்டு குதிரையை ஓட்டுவது போல் தனுஷ் ஓட்டி வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது.

மேலும் சௌந்தர்யா விவாகரத்து பெற்றது தனுஷ் மகிழ்ச்சியில் இருந்துள்ளார். தங்கையுடன் நெருக்கமாக இருக்கும் விஷயம் ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்த பின்பு ஐஸ்வர்யா – சௌந்தர்யா இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது, ஆனால் இருவரும் பேசி சரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் அரவணைத்து அக்கா, தங்கை இருவரையும் நம் கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என தனுஷ் விருப்பியுள்ளார்.

அப்படி நடந்தால், கடைசியில் ரஜினிகாந்த் மொத்த சொத்துக்களும் தன் வசம் வந்துவிடும் என கனவு கோட்டையை தனுஷ் கட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் சற்றும் எதிர்பாராத விதமாக தொழில் அதிபர் விசாகனை காதலித்து சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்தது, தனுஷ்க்கு மிக பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுவிய மீனில் நழுவிய மீன் என்கிற கதையாக தனுஷ் திட்டம் மிக விரைவில் முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்பு, ஐஸ்வர்யா – தனுஷ் இடையே கருத்து வேறுபாடு உச்சக்கட்டம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இதன் பின்பு தான் ரஜினிகாந்த் குடும்பத்தில் இருந்தும் மெல்ல விலக தொடங்கியவர் பெரும்பாலும் மனைவியுடன் பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிரந்தரமாக பிரிய முடிவு செய்து, இருவரும் பிரிவதாக அறிவித்ததாக கூறப்படுகிறது குறிப்பிட்டத்தக்கது.

சூர்யா கும்பலில் மாபெரும் பித்தலாட்டத்தை கிழித்து தொங்கவிட்ட பரிதாபம்.