தலைகீழாக மாறிய தனுஷ் வாழ்க்கை… மனைவியை விட்டு பிரிந்த பின்பு நடந்த அற்புதம்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த வருடம் ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் பிரிவதாக தனித்தனியாக அறிவிப்பை வெளியிட்டு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவருடைய மனைவியை விட்டு பிரிவதற்கு முன்பு தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தார், மேலும் இரவு பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என நடிகைகளுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்தது, தனுஷின் இந்த நடவடிக்கைகளால் தொடர்ந்து தனுஷ் மனைவிக்கும், அவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில்,

யாரும் எதிர்ப்பாராத விதத்தில் திடீரெனெ தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்தது, தனுஷ் சில நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் ஏற்றெல்லாம் விமர்சனம் எழுந்தது, இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்வின் போது பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இணைவார்கள் என கூறப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்த தனுஷ் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, பொதுவாகவே நடிகர் தனுஷ் அவருடைய மாமனார் ரஜினியை பின்பற்றி ஆன்மீகம், அமைதி என மாமனாரின் உள்ள சில விஷயங்களை பின்பற்ற கூடியவர் தனுஷ். இந்நிலையில் மனைவியை விட்டு பிரிவதற்கு முன்பு, பப்பு , பார்ட்டி என வாழ்க்கையை வேறு விதமாக ரசித்து வாழ்ந்து வந்த தனுஷ்.

மனைவியை விட்டு பிரிந்த பின்பு அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. தனுஷ் தற்பொழுது அதிகம் வாசிக்கும் பழக்கத்திற்கு மாறியுள்ளதாகவும், அந்த வகையில் இலக்கியம், நாவல் போன்ற புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வரும் நடிகர் தனுஷ், ஒவ்வொரு முறையும் புத்தக கண்காட்சி நடக்கும் போது, அவருடைய அலுவலக உதவியாளர்களிடம், இவரே சில புத்தகங்களை குறிப்பிட்டு வாங்கி வர சொல்கிறாராம்.

அப்படி ஒவ்வொரு முறையும் சுமார் 50,000 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி வர வைத்து, அடுத்த புத்தகக் கண்காட்சி நடப்பதற்குள், முன்பு வாங்கிய புத்தகங்களை படித்து முடித்து விடுகிறாராம் தனுஷ், அந்த வகையில் நடிகர் தனுஷ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேசும்போது அவருடைய பேச்சுக்களில் பல மாற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருவதை பார்க்க முடிகிறது, மிகவும் அறிவுபூர்வமான சில கருத்துக்களை தனுஷ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் பேசுவதற்கு பின்னணியில் அவர் தொடர்ந்து பல புத்தகங்களை தனிமையில் வாசித்து வருவதின் தாக்கம் தான் என்கின்றனர்.

அந்த வகையில் இதற்கு முன்பு நடிகர் தனுஷ் என்றாலே பார்ட்டி, பப்பு என செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது அது மாதிரியான பழக்கத்தை முழுமையாக தனுஷ் கைவிட்டு விட்டு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அமைதியை விரும்பி தனிமையில் இருக்க விரும்பும் தனுஷ், அப்படி தனிமையில் இருக்கும் போது தான் வாங்கி வைத்திருந்த பல புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது அவருக்கு நெருக்கமானவர்கள் யாரும் பார்ட்டி என்று கூப்பிட்டால் கூட, அவர் போக மறுத்துவிட்டு தனிமையவே அதிகம் விரும்புவதாகவும் மேலும். அவருக்கு தனிமையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் கொடுப்பதாக தனுஷ் உணர்வதால் தொடர்ந்து தனிமையில் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் தனுஷ் என கூறப்படுகிறது.