வாய் இருக்குன்னா தனுஷ் என்ன வேண்டுமென்றாலும் பேசுவதா.! இஷ்டத்துக்கு பொய் பேசலாமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ், அடுத்தடுத்து கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதுவரை 49 படங்களில் நடித்துள்ள தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், கடந்த ஆண்டு போயஸ் கார்டனில் தான் கட்டி குடிப்பெயர்ந்த பங்களா வீடு பற்றி பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போயஸ் கார்டனில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனுஷ் கட்டியுள்ள பங்களா வீடு அவரது மாமனார் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வீடுகளின் அமைந்துள்ளது.

போயஸ் கார்டனில் தனுஷ் வீட்டை கட்டியதில் இருந்தே இணையம் முழுவதும் ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அவரின் சொகுசு கார் மற்றும் ஆடம்பரமான வீடு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், போயஸ் கார்டனில் தான் வீடு வாங்கியது குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்.

இது குறித்த தனுஷ் பேசிய போது, போயஸ் கார்டனில் வீடு வாங்குவது இவ்வளவு பெரிய விஷயமாக உருவெடுக்கும் என்று தெரிந்திருந்தால் நான் சிறிய அப்பார்ட்மெண்டிலேயே வசித்து இருப்பேன். ஏன் என்னை மாதிரி ஆள் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா? தெருவில் பிறந்தவன் தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயேதான் இருக்க வேண்டுமா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து தனுஷ் பேசுகையில், போயஸ் கார்டனில் வீடு வாங்கியதற்கு பின்னால் ஒரு சிறிய கதை இருப்பதாகவும் தனது சிறு வயது நினைவுகளை நினைவு கூர்ந்த தனுஷ், போயஸ் கார்டனில் வீடு வாங்கியதற்கு பின்னால் ஒரு சிறு கதை இருக்கிறது. அப்போது எனக்கு 16 வயது. ஒரு நாள் என் நண்பருடன் பைக்கில் சுற்றி திரிந்த போது எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை பார்த்த ஆசை பட்டேன்.

அப்போது அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் அவரது வீட்டை கண்டுபிடித்து பிரமிப்புடன் பார்த்துவிட்டு குஷியாக வந்தோம்.பைக்கில் வரும்போது தலைவரின் வீட்டுப் பக்கம் பெரும் மக்கள் கூட்டத்தை கண்டோம்.அப்போது அங்கு இருந்தவர்களிடம் என்ன கூட்டம் என்று கேட்டபோது, அதுதான் ஜெயலலிதாவின் வீடு என்று கூறினார்கள்.

இரண்டு வீடுகளையும் பார்த்தேன். அப்போது என் மனதில் ஆசை தோன்றியது.போயஸ் கார்டனில் ஒரு சிறிய வீட்டையாவது வாங்கிவிட வேண்டும் என்று ஆசை வந்தது என பேசிய தனுஷ், மேலும் ஆரம்ப காலத்தில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். துள்ளுவதோ இளமை படம் வெற்றி பெறவில்லை என்றால் நாங்கள் தெருவில் வாழ வேண்டி இருக்கும். சுமார் 20 வருடங்கள் உழைத்து போயஸ் கார்டனில் நான் வாங்கிய பங்களா வீடு 16 வயது இளைஞன் வெங்கடேச பிரபுவுக்கு தனுஷ் கொடுத்த பரிசு ” என்று கூறினார்.

தனுஷின் பேச்சை கேட்ட ரசிகர்கள் கைதட்டி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், தனுஷின் பேச்சு செயற்கையாக இருப்பதாகவும் இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதையுடன் ஆரம்பிப்பது என்பது இன்றைய டிரெண்டாகிவிட்டது என்றும் ஆனால் அதற்காக பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும், 16 வயதில் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என ஆசை பட்டது என்பதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை, இதெல்லாம் நம்ப மக்கள் என்ன முட்டாளா.? என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.