ஏன் நான் போயஸ் கார்டனில் அதை செய்ய கூடாதா.? சுசித்ராவுக்கு தனுஷ் கொடுத்த நச் பதிலடி..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் குறித்து தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பின்னணி பாடகி சுசித்ரா பேசி வருகிறார். தனுஷ் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி படு மோசமாக பேசி வரும் சுசித்ரா, பேட்டி ஒன்றில், தனுஷ் மோசமானவர் தான் ஆனால், தனுஷை விட பெரிய மோசடிக்காரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான், அந்த இரண்டு குழந்தைகளும் தாத்தா மற்றும் பாட்டியிடம் வளர்ந்தால் நல்லா இருக்கும்.

இவர்கள் இருவரில் யாரிடம் இருந்தாலும் கெட்டுத்தான் போகும் என தெரிவித்த பாடகி சுசித்ரா. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அவர்களுடைய திருமண உறவில் உண்மையாக இல்லை என்றும், இருவரும் திருமண உறவில் இருக்கும்போதே தங்களுக்கு பிடித்த நபர்களுடன் டேட்டிங் செல்வார்கள் என பரபரப்பை கிளப்பிய சுசித்ரா.

மேலும் தன்னுடைய முன்னால் கணவருடன் தனுஷை இணைந்து வைத்து பேசிய சுசித்ரா, முன்னால் கணவர் கார்த்திக் ஒரு கேய். அவனுக்கு ஆண் நண்பர்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்ததால், அப்போவே இரண்டு நண்பர்களுடன் தனிநபர் ரூம் போட்டு தங்கினான். என்னுடைய கணவருக்கும் தனுஷுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. ஒரு நாள் குடித்துவிட்டு இருவரும் ஒரே அறைக்குள் போய்விட்டனர்.

அங்கு என்னவெல்லாம் பண்ணுனார்கள் என்பது எனக்கு தான் தெரியும். கார்த்திகை கல்யாணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அதை எடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொண்ட போது தான் அவனைப் பற்றி எனக்கு தெரிய வந்தது. அவனிடம் தான் குறை இருக்கிறது என்று மருத்துவர் உறுதி செய்தார். என்று சுஜித்ரா பகிரங்கமாக முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பேட்டியளித்து இருந்தார்.

இப்படி தொடர்ந்து சுசித்ரா, தனுஷ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர், தனுஷ் போயஸ் கார்டன் வீடு குறித்து பேசி இருந்தார். இந்நிலையில், தன் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் சுசித்ராவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ராயன் ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் தனுஷ், நான் யாருன்னு எனக்கு தெரியும். என்னை படைத்த அந்த சிவனுக்கும், என் அப்பா, அம்மாவுக்கும் என் பசங்களுக்கும் என் ரசிகர்களுக்கும் தெரியும் என பேசிய தனுஷ்.

முதலில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன் நான், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடக்கிறது பேசிய தனுஷ். தனுடைய போயஸ் கார்டன் வீடு குறித்தும் பேசியவர்,அதாவது தலைவர் வீட்டை பார்க்க போயஸ் கார்டனுக்கு சென்றபோது, போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம், தலைவர் வீடு எங்கே என்று கேட்டதற்கு அங்கேதான் இருக்கு சைலண்டா பாத்துட்டு போயிறணும் என்றார்கள்.

அப்படியே, நானும் தலைவர் வீட்டை பார்த்துவிட்டு திரும்பினேன். ஆனால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம், அது யாரு வீடுன்னு கேட்டால், ஜெயலலிதா அம்மா வீடுன்னு சொன்னார்கள். அப்படியே வியந்து போய் இந்த பக்கம் ரஜினி சார் வீடு அந்தப் பக்கம் ஜெயலலிதா அம்மா வீடு நடுவில் நாம வீடு கட்டினால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் ஏன் நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா? என தன்னை பற்றி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் சுகித்திராவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனுஷ் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.