என்னை மன்னிச்சுடுங்க… ரஜினியை கட்டி பிடித்து கதறி அழுத தனுஷ்…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இருவரும் தங்கி இருந்த நிலையில், அங்கிருந்து இருவரும் தனித்தனியாக நாங்கள் திருமண உறவில் இருந்து ஒருமனதாக பிரிக்கிறோம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் மீண்டும் இணைவதற்காக நடந்த பேச்சு வார்த்தைகள் அனைத்துமே தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து இருவரும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே ஆஜராகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நல குறைவிற்கு அவருடைய மன நிம்மதியும் ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். அவருக்கு ம நிம்மதி இல்லாததால் சந்தோஷம் இல்லை, அதுவும் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கு காரணம் என மருத்துவர்கள் ரஜினிகாந்த் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை அழைத்து தனியாக பேசியிருக்கிறார்.

அப்பாவிற்கு சந்தோஷம் இல்லை மன நிம்மதி இல்லை அதற்கு முக்கிய காரணம் நீ விவகாரத்தை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளது தான். அப்பாவை மன நிம்மதியோடு இருக்க வேண்டும் என்றால் நீ தனுஷ் உடன் இணைந்து வாழ வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் அவருடைய மகள் ஐஸ்வர்யாவிடம் பேசியுள்ளார். இதன் பின்பு நன்கு சிந்தித்த ஐஸ்வர்யா தன்னுடைய தந்தையின் உடல்நிலை கருத்தில் கொண்டு, மேலும் இரண்டு மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தனுசுடன் இணைவதற்கு ஐஸ்வர்யா சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க சென்றிருக்கிறார் தனுஷ், மாமனார் ரஜினிகாந்த் பார்த்ததும் முதல் வார்த்தை என்னை மன்னித்து விடுங்கள் என்று தெரிவிக்க ரஜினிகாந்த் அவரை ஆரா தழுவி வரவேற்றுகிறார்.

இதன் பின்பு மாமனார் ரஜினிகாந்தை கட்டிப்பிடித்து மீண்டும் மீண்டும் என்னை மன்னித்து விடுங்க என்று கண்கலங்கி கதறி அழுது இருக்கிறார் தனுஷ் என கூறப்படுகிறது. இதன் பின்பு தன்னுடைய மாமனாரிடம் நீண்ட நேரம் மனம் விட்டு தனுஷ் பேசி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் தனுஷும் ஒருமனதாக மீண்டும் இணையா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தான் சமீபத்தில் ஐஸ்வர்யா தனுஷ் இருவருடைய வழக்கு விசாரணையின் போது இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா – தனுஷ் இருவருடைய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்பொழுது இருவருமே ஆஜராகி நாங்கள் இருவரும் ஒருமனதாக மீண்டும் இணைந்து வாழ விரும்புகிறோம் என்று தெரிவித்து அந்த வழக்கை வாபஸ் பெறுவதற்கான வேலையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே மீண்டும் இணைந்து விட்டார்கள், ஆனால் அதிகாரப்பூர்வமாக தான் எந்த தகவலும் வரவில்லை, விரைவில் அந்த தகவலும் வெளியாகும் என்கின்ற ஒரு பேச்சும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here