ரஜினியால் கடனாளியான தனுஷ்… கடனை அடைக்க என்ன செய்தார் தனுஷ் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் அவருடைய தந்தையை கஸ்தூரிராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அவருடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்து ஒரு நடிகர்களுக்கான அங்கீகாரத்தை பெற்ற தன்னுடைய கடின உழைப்பினால் மிகப்பெரிய உச்சத்திற்கு வந்தவர் நடிகர் தனுஷ்.

இதன் பின்பு சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் தனுஷ். மனைவி ஐஸ்வர்யாவின் இயக்குனர் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருடைய இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து தனுஷ் நடித்த 3 படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து, தனுஷுக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. இருந்தும் தனுஷ் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியான படம் வெற்றி பெற்று லாபத்தை கொடுத்தது.

இடையிடையே ஒரு சில படங்கள் தோல்வியை தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், பெரிதாக ஏதும் பாதிப்பை தனுஷ்க்கு ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கபாலி. இந்த படம் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் மிக பெரிய லாபத்தை தயாரிப்பாளர் தாணுவுக்கு பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து இதே போன்று, மாமனார் ரஜினிகாந்தை வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படத்தை தயாரித்து மிக பெரிய லாபத்தை சம்பாரித்து விட வேண்டும் என முடிவு செய்த தனுஷ், கடைசியாக ரஜினி நடித்த கபாலி பட இயக்குனர் ரஞ்சித்திடம் கபாலி போன்று சிறிய பட்ஜெட் படம் ஓன்று தன்னுடைய தயாரிப்பில் எடுக்க ஒப்பந்தம் செய்து, ரஜினிகாந்திடம் கால்சீட் வாங்கி படத்தையும் தொடங்கினார் தனுஷ்.

இந்நிலையில் காலா படம் வெளியாகி எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்க்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் கடும் கடன் சுமைக்கு ஆளான தனுஷ். மாமனாரை நம்பி பெரிய லாபத்தை சந்தித்து விடலாம் என்று திட்டமிட்ட தனுஷ் மிக பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது என்கிற கடும் நெருக்கடியில் சிக்கி தவித்தார்.

கடனை அடைக்க தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படத்திற்கு கால்சீட் கொடுத்து, அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிய தனுஷ், பின்பு தான் வாங்கிய மொத்த கடனையும் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தாணுவிடம் போட்ட ஒப்பந்தப்படி, அவருடைய தயாரிப்பில் அசூரன், கர்ணன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் தனுஷ், மூன்றாவதாக நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ரஜினியை சிக்க வைத்த இரண்டு மகள்கள்…. அன்புச்செழியன் விவகாரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?