ஆண்களையும் விட்டு வைக்காத தனுஷ்… ஓரே ரூமில் தனுஷ் என்ன செய்தார்… பாடகி சுசித்ரா சொன்ன பரபரப்பு..

0
Follow on Google News

பிரபல பாடகி சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து பற்றியும், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் பகிர் கிளப்பும் தகவல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தன் கணவர் ஒரு ‘கேய்’ என்று அவர் கூறியது தற்போது செய்தி ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ரேடியோ மிர்ச்சி சென்னையில் ஆர் ஜே வாக பணிபுரிந்து, பின்னர் தமிழ் மலையாளம் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிரபலமான பின்னணி பாடகியாக வளம் வந்தவர் சுசித்ரா. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவர் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் காமெடி நடிகரான கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இருவரும் கணவன் மனைவியாக 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகளுக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த சூழலில் பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனுஷையும் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரையும் படு பயங்கரமாக விலாசியுள்ளார். இது தொடர்பாக சுசித்ரா பேசுகையில், “சுச்சி லீக்ஸ் சர்ச்சையை பொருத்தவரை, தனுஷ் கார்த்திக் குமாரின் கேங் செய்த பிராங்க்.

ஆனால் அந்த சமயத்தில் அது என்னுடைய ட்விட்டர் கணக்கில் வெளியானதால் அந்தப் பிரச்சனைக்கு நான் பலியாடாகி விட்டேன். அதற்காக நிச்சயமாக நான் தனுஷின் கை காலை உடைப்பேன். சட்டத்தைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஜெயிலுக்கு போக தயாராக இருக்கிறேன்.” என்று தனுஷ் குறித்து ஆவேசமாக பேசியிருந்தார்.அதைத்தொடர்ந்து தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பேசுகையில், “தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் நான் தனுஷ் பக்கமே நிற்கிறேன்.

விவாகரத்துக்கு பிறகு தனுஷ் தனது வேலையில் கவனம் செலுத்தி கண்ணியமாக நடந்து கொண்டு வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா அவரது குழந்தைகளுக்கு மிகவும் மோசமான தாயாக இருந்து வருகிறார். வெறுமனே சோசியல் மீடியாவில் ரீல்சை போட்டு அவரை அவரே ப்ரொமோட் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையில் ஒத்துவரவில்லை என்பதால் தானே பிரிந்து செல்கிறார்கள். அப்புறம் அவர்களுக்காக ஏன் நீங்கள் பாவம் பார்க்கிறீர்கள்?” என்று சுசித்ரா கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய சுசித்ரா, “இந்த விஷயத்தில் அவர்கள் மகன்கள் கூட பாவம் கிடையாது. விவாகரத்து ஆன பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக அன்பு காட்டுவார்கள். இனிமேல் அந்த பசங்களுக்கு நிறைய அன்பு கிடைக்கும் “என்றும் கூறி உள்ளார். “நானும் என் கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்த போது மிகவும் சந்தோசமாக இருந்தேன். ஆனால் அவன் அவன் மீது உள்ள குறையை மறைப்பதற்காக உடனடியாக வேறொரு திருமணம் செய்து கொண்டான்.

அவன் ஒரு கேய். அவனுக்கு ஆண் நண்பர்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்ததால், அப்போவே இரண்டு நண்பர்களுடன் தனிநபர் ரூம் போட்டு தங்கினான். என்னுடைய கணவருக்கும் தனுஷுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. ஒரு நாள் குடித்துவிட்டு இருவரும் ஒரே அறைக்குள் போய்விட்டனர். அங்கு என்னவெல்லாம் பண்ணுனார்கள் என்பது எனக்கு தான் தெரியும். கார்த்திகை கல்யாணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அதை எடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொண்ட போது தான் அவனைப் பற்றி எனக்கு தெரிய வந்தது. அவனிடம் தான் குறை இருக்கிறது என்று மருத்துவர் உறுதி செய்தார். என்று சுஜித்ரா பகிரங்கமாக முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பேட்டியளித்துள்ளார்.