தனுஷ் வாங்கிய பலத்த அடி… அய்யோ விஜய், அஜித்தா.. பேரை கேட்டதுக்கு தெறித்து ஓடிய தனுஷ்.!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர தயாராக இருக்கும் படம் வாரிசு, இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது, மூன்று மொழிகளில் இந்த படம் எடுக்கப்படுத்துள்ளதால், இந்த ஒரே படத்திற்காக நடிகர் தனுஷ் 24 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். பெரும்பாலும் ஆந்திராவில் எடுக்கப்பட்டுள்ள வாத்தி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், டிசம்பர் மாதம் அவதார் படம் வெளியாக இருப்பதால், அதே மாதத்தில் வெளியிட்டால் சிக்கலாகிவிடும், மேலும் குறைந்தது நான்கு வாரமாவது வாத்தி படம் ஓடவேண்டும், அப்போது தான் பெரும் லாபத்தை ஈட்ட முடியும் என்பதால், அவதார் படம் வெளியாகும் அதே மாதத்தில் வெளியிடுவதை தவிர்த்து, ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான நானே ஒருவன் படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்துடன் நேரடியாக மோதி மண்ணை கவ்வியது, இந்நிலையில் வாரிசு படத்தை பொங்கல் பண்டிகையின் போது வெளியிடுவது பற்றி ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது.

ஆனால் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திடம் தனுஷ் படம் நேரடியாக மோதி மண்ணை கவ்வியதை நினைத்து, பொங்கல் பண்டிகையின் போது அஜித் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாக இருப்பதால். அய்யோ..அஜித் விஜயுடன் மோதுவதா.? வேண்டவே வேண்டாம் என்று பிப்ரவரி மாதம் வாத்தி படம் வெளியிடுவதற்கு தள்ளி வைக்கப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.