இங்கயும் தனுஷ் தான் பிரச்சனையா.? நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை…

0
Follow on Google News

பொதுவாக நடிகர்கள் அடிக்கடி இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர், அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியும் அடிக்கடி இரவு பார்ட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜெயம் ரவி திருமணத்துக்கு பின்பு எந்த ஒரு நடிகைகளிடமும் கிசு கிசுவில் சிக்காமல் இருந்து வருகின்றவர், அந்த வகையில் இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது மனைவியுடன் தான் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது.

இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் குடும்ப நபர்களை அறிமுகம் செய்து நட்பை வளர்த்து கொள்ள கூடியவர்களாக இருந்து வருகின்றவர்கள். அந்த வகையில் ஜெயம் ரவி மனைவியும் நடிகர் தனுஷ்க்கு அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பார்ட்டிகளில் ஜெயம் ரவி மனைவியுடன் கலந்து கொண்ட போது தனுஷை சந்திக்க நேரிட்டது, மேலும் ஒரு கட்டத்தில் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி இருவரும் நெருங்கி பழக தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்து வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் ஜெயம் ரவி, இந்த பார்ட்டியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார், அப்போது அந்த பார்ட்டியில் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி இருவரும் சண்டை போடுவது போன்ற புகைப்படம் கூட வெளியாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அங்கே என்ன நடந்தது எதற்காக இவர்கள் அந்த புகைப்படத்தில் சண்டை இடுகிறார்கள் என்கிற நம்ப தகுந்த மாதிரி எந்த ஒரு தகவலும் வரவில்லை.

இந்நிலையில் தனுஷ் குறித்து சினிமா வட்டாரத்தில் மிக பெரிய அளவில் சினிமா நடிகை உடன் கிசு கிசு செய்திகள் உலா வந்துகொண்டிருந்தது. சினிமா நடிகைகள் தொடங்கி, தொலைக்காட்சி தொகுப்பாளினி வரை யாரெல்லாம் விவாகரத்து பெறுகிறார்களோ, அதற்கெல்லாம் காரணம் நடிகர் தனுஷ் தான் என கிசு கிசு பறந்தது, மேலும் தனுஷ் உடன் நெருக்கமான வட்டாரத்தில் இந்த அனிருத் உட்பட பலரும் எதாவது ஒரு நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தனர்.

இந்நிலையில் தனுஷ் உடன் இருப்பவர்களும் தனுஷ் மாதிரி தான் என்கிற பேச்சு இருந்த நிலையில், தொடர்ந்து தனுஷ் உடன் தன்னுடைய கணவர் ஜெயம் ரவி நட்பாக இருந்தால், அவரும் தனுஷ் போன்று சேட்டை செய்ய தொடங்கி விடுவார் என பயந்த ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, முதலில் தனுஷ் உடனான நட்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தனுஷ் உடன் பழகுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என மனைவி ஆர்த்தி கண்டிஷன் போட, ஜெயம் ரவியும் தனுஷ் உடன் பழகுவதை நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் இடம் இருந்து கணவர் ஜெயம் ரவியை ஆர்த்தி காப்பாற்றினாலும் கூட, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த போது, அந்த படத்தில் நடித்த நடிகையுடன் ஜெயம் ரவி கிசு கிசுவில் சிக்கியதை தொடர்ந்து, இதனால் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி இடையில் புகைச்சலை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இது சிறு சிறு பிரச்சனையாக இருந்தது தற்பொழுது மிக பெறிய விஸ்வருபம் எடுத்துள்ளதாம்.

ஒருகட்டத்தில் விவாகரத்து செய்யும் முடிவுக்கு ஜெயம் ரவி வந்ததை தொடர்ந்து, மனைவி ஆர்த்தி விவகாரத்தெல்லாம் வேண்டாம் தனக்கு ஜெயம் ரவி உடன் இணைந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம், அதாவது காதல் என்பது வார்த்தை இல்லை, அது வாழ்க்கை, நான் கணவர் ஜெயம் ரவியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்க. தற்பொழுது மனைவியை விட்டு பிரியும் முடிவு எடுத்துள்ள ஜெயம் ரவியை சமாதானம் செய்யும் முயற்சி குடும்ப நண்பர்களால் நடந்து வருவதாக கூறப்படுகிறது.