தியேட்டரில் ஈ. காக்கா கூட இல்லை… தனுஷின் ராயனுக்கு வந்த சோதனை… எவ்வளவு வசூல் தெரியுமா.?

0
Follow on Google News

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகும் நிலையில் ராயல் படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் தனுசுடன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.படம் முழுக்க அடி வெட்டு குத்து கொலை ரத்தம் என அதிரடி காட்சிகள் நிறைந்திருக்கிறது.

இதனால் சென்சார் போர்டு தரப்பில் ராயன் படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமானின் இசை படத்தை ஒரு படி மேலே உயர்த்தி காட்டி இருக்கிறது. ஏற்கனவே பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்த தனுஷ், ராயன் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிரூபித்து காட்டியிருக்கிறார். படம் ரிலீஸ் ஆனதிலிருந்து ரசிகர்கள் பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்து வரும் நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எகுறும் என்று பட குழுவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் படத்தின் வசூல் நூறு கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ராயன் 100 கோடி வசூலை அள்ளிவிட்டால், 100 கோடி வசூலை அள்ளி இயக்குனர்களின் பட்டியலில் தனுஷ் பெயரும் இடம் பெறும். ராயன் திரைக்கதை எப்படி இருக்கு? படத்தின் முதல் பாதி ரசிகர்களை கதைக்குள் ஆழ்த்தி இழுத்துச் செல்வதால் போர் அடிக்காமல் செல்கிறது.

குறிப்பாக இன்டர்வெல் பிளாக் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலும் இருட்டிலுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் நூறு கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட ராயன் திரைப்படம் ஜூலை 26ம் தேதி வெளியாகி வெற்றி நடை போடுகிறது. இருப்பினும் சோசியல் மீடியாக்களில் ராயன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ராயன் வசூல் விபரம் குறித்து வெளியான தகவல்களின்படி, முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 13.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 13.75 கோடி ரூபாயும் வசூல் செய்து அசத்தியது. இதனால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பட குழுவினர் உற்சாகத்தில் இருந்தனர்.

பேன் இந்தியா படமாக பல்வேறு மொழிகளிலும் வெளியான ராயன் மூன்றாவது நாளில் 15.25 கோடி, நான்காவது நாளில் 5.8 கோடி மற்றும் ஐந்தாவது நாளில் 4.8 கோடி என அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சரிவை சந்தித்தது. முதல் இரண்டு நாட்களில் வசூலை அள்ளி குவித்த ராயன் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் படுத்து விட்டதால் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா என்ற கவலையில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை 52 கோடிகளை வசூல் செய்துள்ள ராயன், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மிகப்பெரிய படங்கள் எதுவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாததால் எப்படியும் 100 கோடியை வசூல் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இப்போதே ஆடியன்ஸ் குறைந்து தியேட்டர்கள் காத்து வாங்கிக் கொண்டிருப்பதால் வசூல் நூறு கோடியை தொடுமா என்று சந்தேகம் நிலவி வருகிறது.