தனுஷ் என்னிடம் வெளிப்படையாக கேட்டார்… நான் வேண்டாம் என்றேன்…நடந்ததை போட்டுடைத்த சுசித்ரா..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் சினிமாவில் அசுரன் என்று எந்த அளவுக்கு போற்றப்பட்டு அவருடைய நடிப்பு திறமைக்கு பாராட்டு பெற்று மிக உயரத்தில் இருந்து வருகிறாரோ.! அதே உயரத்திற்கு அவரைப் பற்றிய கிசு கிசு செய்திகளுக்கும் பஞ்சமில்லாமல் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். நடிகர் தனுஷ் அவருடைய மனைவியை விட்டு பிரிவதற்கு முன்பே பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி அது தொடர்பான பல கிசு கிசு செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்த வண்ணம் இருந்தது.

இருந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் எந்த ஒரு கருத்து மோதலும் இருந்ததாக வெளியே தெரியவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் திடீரென்று தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒரு மனதாக பிரிக்கிறோம் என்று அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டனர். இது பொதுவாகவே சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் சினிமா துறையில் உள்ள பலருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தரவில்லை.

காரணம் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் தொடர்ந்து சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும், ஆனால் அவர்கள் வெளி காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்குள்ளேயே மூடி மறைத்து வந்த நிலையில் இது ரெம்ப நாள் நீடிக்காது என ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் அறிந்து கொண்டவர்களுக்கு, தனுஷ் ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்ததில் எந்த ஒரு ஆச்சரியம் இல்லை என சினிமா வட்டாரத்தில் அப்போது பேசப்பட்டது.

தனுஷ் குறித்த கிசு கிசு செய்திக்கு தொடக்க புள்ளிக்கு காரணம் பின்னணி பாடகி சுசித்ரா தான், தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா விட்டு பிரிவதற்கு முன்பே தனுஷ் குறித்த பல கிசுகிசுக்களை சுசி லீக்ஸ் என்ற பெயரில் புகைப்படமாக வெளியிட்டு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர் பின்னணி பாடகி சுசீத்ரா, மேலும் சுசி லீக்ஸ் வெளியான பின்பு தான் தனுஷ் குறித்து அடுத்தடுத்து பல கிசு கிசுக்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் மீண்டும் தனுஷ் குறித்த சில தகவல்களை பின்னணி பாடகி சுசித்ரா பகிர்ந்துள்ளார். அதாவது நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதற்கு முன்பே தனுசுடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார் பின்னணி பாடகி சுசித்ரா. மேலும் தனுஷ் திருமணத்திற்கு முன்பு பின்னணி பாடகி சுசித்ராவும் திருமணம் செய்து கொள்ளாத அந்த காலகட்டத்தில் காதல் கொண்டேன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்.

காதல் கொண்டேன் வெளியான பின்பு தான் தனுஷ் ஒரு நடிகருக்கான அங்கீகாரத்தை பெற்ற அந்த காலகட்டத்திலே தனுசுடன் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார் பின்னணி பாடகி சுசித்ரா. அப்போது காதல் கொண்டேன் படத்தில் நடித்த தனுசை பாராட்டும் விதத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பொக்கை ஒன்றே அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய நெருங்கிய நண்பரான சுசித்ராவிடம் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனக்கு பொக்கை அனுப்பி உள்ளார். அவரை எனக்கு பிடித்திருக்கிறது. நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்று தன்னுடைய விருப்பத்தை தன்னுடைய நெருங்கிய நண்பரான சுசித்திராவிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

ஆனால் அதற்கு சுசித்ரா, நீ என்ன லூசா , ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும். இருந்தாலும் நடிகர் தனுஷ் அவருடைய காதலில் உறுதியாக இருந்ததால் ரஜினி மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ஒரு வளர்ந்து வரும் நடிகர் என அறிந்து கொண்டு ஆரம்பத்திலேயே கோழி அமுக்குவது போல் ரஜினிகாந்த் மகள் பொக்கையை கொடுத்து அமுக்கி விட்டார் என்றும் பின்னணிப் பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here