மாமியார் லதாவை டென்ஷனாக்கிய தனுஷ்.. என்னை யாருனு நினைச்சீங்க..தரமான சம்பவம் செய்த தனுஷ்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர், அந்த வகையில் தனது தாய், தந்தை, அண்ணன் செல்வராகவன், சகோதரிகள் என அனைவருக்கும் பொருளாதார ரீதியில் உதவி செய்து வருகின்றவர், இது மனைவி ஐஸ்வர்யாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லை, இதனால் அடிக்கடி தனுஷ் உடன் சண்டையிட்டு வந்துள்ளார், மேலும் கணவன் தனுஷ் குடும்பத்தை சேர்ந்தவர்களை சிறிதும் மதிக்கவே மாட்டாராம்.

இதையெல்லாம் சகித்து கொண்டு தான் தனுஷ் இரண்டு குழந்தைகளுக்காக ஐஸ்வர்யா உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு இருவரையும் இணைத்து வைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, மகன் தனுஷை சமாதானம் செய்து மீண்டும் மருமகள் ஐஸ்வர்யா உடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக மகன் தனுஷிடம் தாய் தந்தை இருவரும் பேசியபோது.

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவால் தான் பெற்ற மன உளைச்சல், மற்றும் தன்னை எப்படியெல்லாம் கட்டு படுத்தி வைத்திருந்தார் என்பது பற்றி சுமார் 30 நிமிடங்கள் வரை பேசிய தனுஷ் இதெல்லாம் ஒரு பத்து சதவிகிதம் தான் உங்களிடம் சொல்லிருக்கேன், முழுவதும் சொன்னால் நீங்க தாங்க மாட்டிங்க என சொன்ன தனுஷ் பட்ட கஷ்டங்களை கேட்டும் கண்ணீர் விட்டு தனுஷ் தாய் தந்தை இருவரும் கலங்கியதாக கூறபடுகிறது.

இதன் பின்பே மகன் விருப்பத்துக்கு விட்டு விட்ட தனுஷ் தாய், தந்தை இருவரும் மகன் – மருமகள் இருவரையும் இனைந்து வைக்கும் முயற்சியை கைவிட்டு விட்டனர். இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதற்கு முன்பு போயஸ் கார்டனில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில் மிக பெரிய பங்களா வீடு ஒன்றை கட்டி வந்தனர்.

இந்த வீட்டில், நீச்சல் குளம் வசதி, நவீன உடல்பயிற்சி கூடம், மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோம் தியேட்டர் வசதி மற்றும் இன்னும் பிற வசதிகளுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்தது, ஆனால் வீடு கட்டுமான பணிகள் தொடங்கிய சில நாட்களிலில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்தனர். இதனால் போயஸ் கார்டன் வீடு கட்டுவதற்கு ஆரம்பத்தில் மாமனார் தரப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை தருவதாக இருந்தது.

ஆனால், ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் பிரிந்த பின்பு, போயஸ் கார்டன் வீட்டை பற்றி மாமனார் தரப்பில் இருந்து யாரும் கண்டு கொள்ள வில்லை, இருந்தாலும் திட்டமிட்ட படி, தன்னுடைய சொந்த பணத்தில் மிக பிரமாண்ட வீட்டை தனுஷ் காட்டியுள்ளார். இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது, தனுஷ் குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுக்கு பொருளாதார ரீதியில் தனுஷ் உதவி செய்து வந்தது தான் முக்கிய காரணம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 150 கோடி செலவில் மாமனார் ரஜினிகாந்த் வீட்டின் அருகில் கட்டியுள்ள பிரமாண்டமான வீட்டை தன்னுடைய தாய், தந்தைக்கு பரிசளித்து எந்த ஒரு சூழலிலும் என்னுடைய தாய், தந்தையை விட்டு கொடுக்க மாட்டேன் என பிரிந்து சென்ற மனைவி ஐஸ்வர்யா, மாமியார் லதா ஆகியோரை வெறுப்படைய செய்வதற்காகவே தாய், தந்தைக்கு புது வீட்டை தனுஷ் பரிசளித்ததாக கூறப்படுகிறது.