நன்றி கெட்டவன் வெற்றிமாறன்…. போதையில் கிழித்து தொங்க விட்ட தனுஷ்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலு மஹிந்திராவிடம் உதவி இயக்குனராக வெற்றிமாறன் பணியாற்றி கொண்டிருந்த போது, இயக்குனர் வாய்ப்புக்காக சுமார் 5 ஆண்டுகளாக தேடி கொண்டிருந்தார். பாலு மஹேந்திர இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடிகர் தனுஷ் நடித்த போது அவருடன் அந்த படத்தின் உதவி இயக்குனர் வெற்றிமாறன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் வசனங்களை வெற்றிமாறன் தான் தனுஷ்க்கு பேசி காண்பித்துள்ளார்.

அந்த படத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போதே, இயக்குனர் வாய்ப்பு கேட்டு தனுஷிடம் கதை சொல்லியுள்ளார் வெற்றிமாறன். ஆனால் தனுஷ் கதை திருப்தியில்லை என மறுத்துவிட்டார். இப்படி தொடர்ந்து தனுஷிடம் ஒவ்வொரு கதையாக அடிக்கடி சந்தித்து சொல்லி வந்துள்ளார் வெற்றிமாறன், அதில் பொல்லாதவன் படத்தின் கதை மிகவும் தனுசுக்கு பிடித்து போக, அந்த படத்திற்கான அணைத்து உதவிகளையும் செய்துள்ளார் தனுஷ்.

பொல்லாதவன் படம் வெளியாகி மிக பெரிய ஹிட் கொடுத்தது, இருந்தும் வெற்றிமாறனுக்கு பெரியதாக ஏதும் வாய்ப்புகள் அமையவில்லை இதன் பின்பு சுமார் மூன்று வருடங்களுக்கு பின்பு மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இந்த படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இதன் பின்பு அவர் இயக்கிய விசாரணை படம் சரி வர போகவில்லை. இதன் பின்பு மீண்டும் தனுஷ் உடன் இணைந்த வெற்றிமாறன்.

வட சென்னை, அசூரன் என மிக பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தார் இதன் பின்பு தான் முன்னணி நடிகர்கள் வெற்றிமாறனை தேடி வர தொடங்கினார்கள். வெற்றிமாறன் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தனுஷ் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் தற்போது சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து வரும் நடிகர் தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடித்தால் அது தன்னை சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் என திட்டமிட்டு.

வெற்றிமாறனை அணுகியுள்ளார், ஆனால் ஆரம்பத்தில் சரி என தெரிவித்த வெற்றிமாறன் சில தினங்களுக்கு பின், தான் சூர்யா, விஜய் ஆகியோரை வைத்து அடுத்தடுத்து படம் பண்ண இருப்பதால் தற்போதைக்கு கால்சீட் இல்லை என தனுஷை வைத்து படம் பண்ண முடியாது என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இந்த முடிவுக்கு பின்னணியில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு பார்ட்டியில் மது விருந்தில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, என்னால் வளர்ந்த வெற்றிமாறன், என்னுடைய கால் சீட்காக காத்திருத்தவன், இப்ப என்னை வைத்து படம் பண்ண கால் சீட் இல்லையாம், நன்றி கெட்டவன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் மது போதையில் வெற்றிமாறனை கிழித்து தொங்கவிட்டார் தனுஷ் என கூறப்படுகிறது.