சிவர்த்திகேயன் பெயரை கேட்டதும் டென்ஷன் ஆன தனுஷ்… நன்றியே இல்லாத பொடி பையன்…

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படத்தில் அறிமுகமானார்.,இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தார் அதனை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது இயக்குனர் பாண்டிராஜன் மற்றும் தனுஷ் என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் தனுஷ் வளர்த்து விட்ட சிவகார்த்திகேயன் அவ்வப்போது தனுசுக்கே போட்டியாக சினிமா துறையில் பல நேரங்களில் செயல்பட்டு வருகிறார், சென்னையில் தனுஷ் அலுவலகம் இருக்கும் அதே பகுதியில் சிவகார்த்திகேயனும் அவருடைய அலுவலகத்தை திறந்து தனுசுக்கு எதிராக தன்னுடைய கெத்தை காட்டியவர். அதேபோன்று சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள புதிய bmw உயர்தர காருக்கு தனுஷ் பயன்படுத்திய 0010 என்கின்ற அதே நம்பரையும் பயன்படுத்தி தனுஸை மேலும் வெறுப்படைய செய்தவர் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வருடம் தீபாவளி அன்று தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக தன்னுடைய நடிப்பில் அயலான் படத்தை வெளியிட முடிவு செய்த சிவகார்த்திகேயன். தனுஷ் படத்தை விட அதிக வசூல் அடையச் செய்து, தனுஷை விட மார்க்கெட்டில் தான் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் தனுஷ் உடன் நேரடியாக மோதிவிடலாம் என்கின்ற முடிவில், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக தன்னுடைய அயலான் படத்தை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

இதில் சிவகார்த்திகேயன் வெற்றியும் பெற்றார். ஆனால் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் என பாராட்டுகளை பெற்றவர், இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதை பெற்று இந்தியா அளவின் தன்னுடைய நடிப்பை பார்த்து வியக்க வைத்தவர் தனுஷ். அப்படி இருக்கையில் தனுஷை ஒரு போட்டியாளராக சிவகார்த்திகேயன் கருதுவது, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும் என்கின்றனர் சீனிம விமர்சகர்கள்.

இந்நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு சிவகார்த்திகேயன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 10 வருடங்களை நிறைவு செய்ததை தொடர்ந்து பலருக்கு நன்றி சொன்னவர் தன்னை தூக்கி விட்ட தனுஷ்க்கு நன்றி சொல்லவில்லை. அப்போது தனுஷ் தனக்கு நெருங்கிய சினிமா நண்பர்களுடன் இரவு பார்ட்டி ஒன்றில் மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மனைவியை பிரிந்த புதிதில் தனுஷ் மிக பெரிய சோதனை காலகட்டத்தில் இருந்த காலம். தன்னுடைய சோகத்தை தனுஷ் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, ஒரு நண்பர் சிவகார்த்திகேயன் பற்றி பேச, அதுவரை வேதனையுடன் பேசிய தனுஷ் தீடிரென கோபப்பட்டு, நான் பார்த்து சினிமாவுக்கு வந்தவன், பொடி பையன் என்னுடைய தயாரிப்பில் எதிர்நிச்சல் படத்தில் நடித்த பின்பு தான் அவனுக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது,

நான் செய்த நன்றியை மறந்து அவனுடைய பத்தாண்டு சினிமா நிறைவு செய்ததற்கு யார் யாருக்கோ நன்றி சொன்னவன், என் பெயரை குறிப்பிட்டு ஒரு நன்றி கூட சொல்லாத நன்றி மறந்த அவனெல்லாம் ஒரு மனிதன் என்று அவனை பற்றி நீங்க பேசலாமா.? என தனுஷ் டென்ஷனான உடனே அவரது நண்பர்கள் பேச்சுவார்த்தையை திசை திருப்பி தனுஷை சமாதனம் செய்ததாக அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது.