சமந்தா வாழ்க்கையில் புகுந்த தனுஷ்… தனுஷ் வாழ்க்கையில் அரங்கேறிய புதிய மாற்றம்.! என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் நள்ளிரவு இருவரும் பிரிவதாக அறிவித்து தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் சக நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கியது தான் என்றும், அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது. மேலும் தனுஷ் உடன் திருமணம் முடிந்த நடிகைகள் பலர் கிசு கிசுவில் சிக்கி விவாகரத்து பெற்ற சம்பவமும் அரங்கேறியது.

அந்த வரிசையில், நடிகை அமலாபால், தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ஆகியோர் விவாகரத்துக்கும் நடிகை சமந்தா பிரிவுக்கும் காரணம் நடிகர் தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கியது தான் என தகவல் வெளியானது. இந்நிலையில் தற்பொழுது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு மீண்டும் படம் இயக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் தனுஷ், தெலுங்கில் இரண்டு படங்கள் இயக்க உள்ளார் தனுஷ்.

தற்பொழுது தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தனுஷ் நடித்து வரும் படம் வாத்தி இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஆந்திராவில் நடைபெற்றது, இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஆந்திராவில் தனுஷ் தங்கியிருந்த போது, ஐஸ்வர்யா இசை ஆல்பம் தயாரிக்கும் பணியில் ஆந்திராவில் தங்கியிருந்தார் அப்போது தான் ஆந்திராவில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் வாத்தி படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது., இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குநராக படம் இயக்க உள்ள தனுஷ், தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் நாகார்ஜுனா சந்தித்து புதிய படத்தின் கதையை தெரிவித்துள்ளார், படத்தின் கதை பிடித்து போக, தனுஷ் இயக்கத்தில் நடிக்க நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனுஷ் – நாகார்ஜுனா இணையும் படம் உறுதியானதை தொடர்ந்து படத்திற்கான அடுத்தகட்ட ஆலோசனையில் தனுஷ் – நாகார்ஜுனா இருவரும் ஈடுபட்டுள்ளனர், அப்போது தங்கள் குடும்பத்தின் சொந்த விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது மகன் நாகசைதையா- சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவது குறித்து மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார் நாகஅர்ஜுன்.

மேலும் பிரிந்த இருவரையும் மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதையும் நாகஅர்ஜுன் தெரிவித்துள்ளார். இதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் சமந்தாவிடம் பேசி பார்க்கிறேன் என தனுஷ் தெரிவித்துள்ளார், மேலும் பிரிந்த நாகசைதையா- சமந்தா இருவரையும் இணைத்து வைக்க நான் முயற்சி செய்கிறேன், என்னிடம் நல்ல பேச கூடிய நபர் தான் சமந்தா என தனுஷ் தெரிவிக்க, உடனே அப்படியே ஆகட்டும் என தனுஷ் விருப்பத்துக்கு ஓகே சொல்லியுள்ளார் நாகார்ஜுனா.

இந்நிலையில் பொதுவாக தனுஷ் பலர் வாழ்க்கையில் புகுந்து கணவர் – மனைவி இருவருக்கு பிரச்சனை உருவாக்கி அவர்கள் பிரிவுக்கு காரணமாக இருந்து வருகின்றவர் தனுஷ் என கிசு கிசு பரவி வந்த நிலையில்,தற்பொழுது சமந்தா வாழ்க்கையில் புகுந்து பிரிந்த தம்பதியினரை மீண்டும் இணைத்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கது, இது தனுஷ் வாழ்க்கையில் அரங்கேறிய புதிய மற்றம் என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சமந்தா – நாகசைதையா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு இரண்டு தரப்பிலும் யாரும் சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு முயற்சி செய்யவில்லை, இதனால் இவர்கள் மீண்டும் இணைவதர்க்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

பயத்தில் பொட்டி பாம்பை அடங்கிய விஜய் … எதற்கு இந்த பயம்.. என்ன நடந்தது தெரியுமா.?