பலகோடி செலவு செய்து மனைவி வசதிக்காக தனுஷ் செய்த செயல்… கடைசியிலே இப்படி போச்சே…

0
Follow on Google News

சென்னையில் மிக முக்கியமான இடங்களில் முதன்மையாக இருக்கக்கூடியது போயஸ் கார்டன், இதற்கு முக்கிய காரணம் அங்கே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் வீடு இருப்பது தான். மேலும் அந்தப் பகுதியில் வீடு வாங்கி குடியிருப்பது ஒரு பெருமையாக கருதும் பல பிரபலங்கள், போயஸ் கார்டனில் வீடு வாங்க முடியவில்லை என்றாலும் கூட, போயஸ் கார்டன் அருகிலே வீடு வாங்கி தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டின் அருகிலேயே ஒரு இடத்தை வாங்கி மிகப் பிரம்மாண்டமான ஒரு பங்களா ஒன்றை கட்டி முடித்து குடியேறியுள்ளார். இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறியது தன்னுடைய மாமனாருக்கு போட்டியாக கிடையாது, அதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது.

நடிகர் தனுஷ் தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டின் பூமி பூஜையை கூட தன்னுடைய மாமனார் மாமியாரை வைத்து தான் தொடங்கினார். அப்போது தன்னுடைய மனைவியுடன் ஒன்றாகத்தான் இருந்து வந்தார். நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டுவதற்கு முக்கிய காரணம் அருகிலே மாமனார் வீடு இருக்கு, தன்னுடைய மனைவி மாமனார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக போயஸ் கார்டனில் வீடு கட்டினார்.

காரணம் நடிகர் ரஜினிகாந்த் இடையில் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் சிகிச்சை எடுத்து மறு வாழ்வு பெற்று வந்த பின்பு. நடிகர் ரஜினிகாந்த் வெளிநாடு சென்றாலும் சரி, படப்பிடிப்புகள் சென்றாலும் சரி கூடவே அவருடைய மகள் ஐஸ்வர்யா செல்வார். காரணம் ரஜினிக்கு தேவையான மாத்திரைகள் மருந்து சரியான நேரத்திற்கு எடுத்து தருவது என ஒரு தாயைப் போல கவனித்து ரஜினிகாந்தை வந்தார் ஐஸ்வர்யா.

அந்த காலகட்டத்தில் தனுஷின் குழந்தைகளும் மிக சிறிய பையன்களாக இருந்தார்கள், அப்படி இருக்கையில் ஐஸ்வர்யா தொடர்ந்து தந்தையை கவனித்து வருவதால் கணவனையும் சந்திப்பது மிக குறைவாக இருந்தது, மேலும் குழந்தைகளை கூட பார்க்க முடியாத ஒரு சூழல் இருந்தது. தொடர்ந்து ரஜினிகாந்த் உடனே ஐஸ்வர்யா பயணிக்க வேண்டும் என்ற ஒரு சூழலில் ரஜினிகாந்த் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டிலே ஐஸ்வர்யாவும் தங்கினார்.

ஆனால் தனுஷ் மாமனார் வீட்டில் ஒரு வீட்டோட மருமகன் போல் தங்குவதற்கு விருப்பமில்லை. இந்த நிலையில் அனைவருக்கும் வசதியாக குறிப்பாக மனைவிக்கும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மாமனார் வீட்டின் பக்கத்திலேயே போயஸ் கார்டனில் ஒரு வீட்டை கட்டி விட்டோம் என்றால் மனைவி ஐஸ்வர்யாவும் மாமனார் ரஜினிகாந்தை பார்த்துக் கொள்வார். நம்மளுடைய குழந்தைகளையும் நம்மையும் பார்த்துக் கொள்வார் என்கின்ற ஒரு திட்டத்துடன் தான் போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்ட பங்களாவை நடிகர் தனுஷ் கட்ட தொடங்கினார்.

தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார் ஆசியுடனே பூமி பூஜையை தொடங்கினார் தனுஷ். ஆனால் அந்த வீடு கட்ட தொடங்கிய பின்பு அந்த வீட்டின் ராசி என்னவோ தெரியவில்லை தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதாவது தன்னுடைய மனைவியின் வசதிக்காகவே போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்ட வீடு கட்டத் தொடங்கிய தனுஷ். அந்த வீடு பாதி கட்டி முடிப்பதற்குள் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த் மாமியார் லதா ரஜினிகாந்தை வைத்து வீட்டின் பூமி பூஜையை தொடங்கிய தனுஷ் வீடு கட்டி முடித்து கிரகப்பிரசவத்திற்கு மாமனாரும் வரவில்லை, மாமியாரும் வரவில்லை, மனைவியும் வரவில்லை, தன்னுடைய மனைவி வசதிக்காக பார்த்து பார்த்து தனுஷ் கட்டிய வீட்டில் தற்பொழுது மனைவியை விட்டு பிரிந்து தனியாகவே வாழ்ந்து வருகிறார் தனுஷ் என்கிறது சினிமா வட்டாரங்கள்.