நீ எனக்கு வாழ்க்கை கொடுத்தியா.? வாய்கொழுப்பில் பேசிய சிவகார்த்திகேயனுக்கு தரமான சம்பவம் செய்த தனுஷ்…

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் சின்ன திரையில் தோன்றி, பல போராட்டத்திற்கு பின் வெள்ளி திரைக்கு வந்து, இன்று பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் விஜய் எப்படி, தான் வளர்ந்து வந்த காலத்தில் சிறுவர்கள் குடும்பத்தினரை தன்னுடைய ரசிகர்களாக மாற்றினாரோ, அதே போல் தான் சிவகார்த்திகேயனும் ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில்தான் தற்போது சிவகார்த்திகேயன் இப்படி வளர்ந்ததற்கு காரணம் தனுஷ் தானா, அதனால் சிவகார்த்திகேயனை தனுஷ் குத்திக்காட்டி கொண்டே இருக்கிறாரா என்றும் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த சிவகார்த்திகேயன் தற்போது தனுஷை தாக்கி பேசியதற்கு, அதற்கு தனுஷ் கொடுத்த பதிலடி என சினிமா வட்டாரமே பற்றி எரிகிறது.

இந்நிலையில்தான் தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன பிரச்சனை என்ற பல தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் சினிமா துறையில் அபார வளர்ச்சி அடைந்தாலும், சமீப காலமாக அவரை சுற்றி பல சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. கிளீன் பாய் என்ற இமேஜோடு வலம் வந்த இவர் மீது, இசை அமைப்பாளர் டி.இமான் வைத்த ஒரு குற்றச்சாட்டு பெரும் பேசுபொருளாக மாறியது.

அப்போது சர்ச்சையில் சிக்கியவர்தான், இன்று வரை பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று அவரின் ரசிகர்கள் கூறி வந்தாலும், அவர் அந்த சர்ச்சை எதற்குமே மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது, தனுஷ் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். முதலில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக மெரினா படத்தில் தான் அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் அவரை நடிகராக Three(3) திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ் தான். மேலும் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தையும் தயாரித்திருந்தார். அப்போதிருந்தே இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல நட்பு ஓடிக்கொண்டிருந்தது. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் இணைந்து சென்று கலகலவென இருப்பார்கள். ஆனால் இப்போது எதிரும் புதிருமாக மாறி இருக்கிறார்கள்.

தனுஷ், முதலில் சிவகார்த்திகேயன் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, நம் படத்தில் நடிக்க எப்போது கூப்பிட்டாலும், தயக்கமில்லாமல் நடிப்பார், நம் பேச்சைக் கேட்டு நம் கண்ட்ரோலில் இருப்பார் என நினைத்தார். ஆனால் நடந்தது என்னவோ வேறு. சிவகார்த்திகேயன் தன்னுடைய நன்றி கடன் போதும் என்று தனது பாதையை அடுத்த படங்களை நோக்கி நகர்த்தி சென்றுவிட்டார். அப்போதே காக்கி சட்டை, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் வந்த காலகட்டத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில்தான் தற்போது நடிகர் சூரி நடித்த கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், யாரையும் கண்டுபிடித்து, இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன், நான்தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள்.

அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை. இதோ எனது நண்பர் இவர்தான் என்று ஒரு அறிமுகம் செய்வோம் இல்லையா, அப்படித்தான் இதனை நான் செய்கிறேன் என பேசியிருந்தார். சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சை கேட்ட ரசிகர்கள் தனுஷை மறைமுகமாக தாக்கி பேசுகிறார் சிவா என பேச ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் பொங்கி எழுந்த தனுஷ் ரசிகர்கள், சிவகார்த்திகேயனுக்கு நன்றியே இல்லை என விமர்சித்ததோடு,

தனுஷ் முன்பு பேசிய வீடியோவில், யாரும் என்னிடம் நன்றியாக இருக்க வேண்டும் என்று நினைத்து நான் எந்த உதவியையும் செய்யவில்லை. அப்படி யாரும் யாருக்கும் நன்றியோடு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என தனுஷ் பேசிய பழைய வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அப்போவே தனுஷ் பதிலடி கொடுத்துவிட்டார் என்றும் இது அவருக்காக தனுஷ் பேசிய வீடியோ தான் என்றும் கூறிவருகின்றனர் .