பண கஷ்டத்தில் தனுஷ்… விரட்டியடிக்கும் பைனான்சியர்..! தற்போதைய தனுஷ் நிலைமை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியை விட்டு பிரிவதாக தனுஷ் அறிவித்த பின்பு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான மாறன் படம் தியேட்டரில் வாங்கி வெளியிட விநியோஸ்தகர்கள் முன் வராத காரணத்தினால், ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியாகியும் கூட மாறன் படத்துக்கு வரவேற்பு இல்லாமல் போனது.

மனைவியை விட்டு பிரிந்த பின்பு தன்னுடைய படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கதையாசிரியர் என ஒவ்வொருவராக வெளியாகி வருகின்றனர், மாணவியை விட்டு பிரிவதற்கு முன்பு கதை சொல்ல எத்தனையோ இயக்குனர்கள் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு தனுஷ் அழைப்புக்காகவும், தனுஷை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருந்தனர். ஆனால் மனைவியை விட்டு பிரிந்த பின்பு தனுஷ் சினிமா வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.

முன்னணி இயக்குனர் யாரும் தனுஷை வைத்து படம் இயக்க முன் வருவதில்லை. இளம் இயக்குனர்களின் கதை நன்றாக இருந்தும், தனுஷ் படம் என்பதால் தயாரிப்பாளர்கள் யாரும் அந்த படத்தை தயாரிக்க முன் வருவதில்லை. இப்படி கடும் நெருக்கடியில் இருக்கும் நடிகர் தனுஷ், மீண்டும் சொந்தமாக படம் தயாரித்து, நடிக்கும் பணியில் இறங்க முடிவு செய்து, அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் தனுஷ்.

ஏற்கனவே சொந்தமாக படம் தயாரித்து பெரும் கடனில் சிக்கிய நடிகர் தனுஷை மாமனார் ரஜினிகாந்த் காப்பாற்றினார், இதன் பின்பு சொந்தமாக படம் தயாரிக்கும் பணியை கைவிட்டார் தனுஷ். இந்நிலையில் தற்போது மீண்டும் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்த தனுஷ் போதுமான பணம் இல்லாததால், புதிய படம் தயாரிக்க சினிமா பைனான்சியர்களிடம் கடன் கேட்டு ஓவ்வருவராக அணுகி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு முன்பு படம் தயாரித்த போது, ரஜினிகாந்த் மருமகன் என்கிற நம்பிக்கையில் பணம் கொடுத்தோம், இப்போதெல்லாம் எதை நம்பி பணம் கொடுக்க முடியும், மேலும் உங்கள் படம் இனி தியேட்டரில் ஓடுமா என்பதே சந்தேகம் என்றும் முகத்தில் அடித்தது போன்று பணம் தரமுடியாது என பதிலளித்துள்ளனர் சினிமா பைனான்சியர்கள், இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல், சொந்த படமும் தயாரிக்க முடியாமல்,

முடிவுக்கு வரும் தனுஷ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள கடுமையாக போராடி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பக்கம் சினிமாவில் மிக பெரிய சரிவை தனுஷ் சந்தித்து வருகையில், மறுபக்கம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யாவுக்கு சினிமா வட்டாரத்தில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

சூர்யாவின் முட்டாள்தனம் தான் காரணம்.. புலம்பி தவிக்கு இயக்குனர் பாண்டியராஜன்..! என்ன நடந்தது தெரியுமா.?