ரஜினி தயவில் நான் இல்லை… ஐஸ்வர்யாவிடம் சவால் விட்ட தனுஷ்… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட உச்சகட்ட மோதலின் காரணமாக இருவரும் ஒருமனதாக தங்களின் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு பிரிவதாக இருவரும் தனித்தனியாக அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

பிரிந்த தம்பதியினர் அதே ஹோட்டலில் தனித்தனி அறைக்கு சென்று தங்கினார்கள். இவர்கள் பிரிவதற்கு முன்பு நடந்த சண்டையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில், தனுஷை மிக கடுமையாக ஐஸ்வர்யா பேசியதாக கூறப்படுகிறது, அப்படி பேசும் போது எனது தந்தை இல்லை என்றால் நீ சினிமாவிலேயே அட்ரஸ் இல்லாமல் போய் இருப்பாய்.

என் தந்தையின் செல்வாக்கை வைத்து தான் உனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்கிறது,மேலும் என்னுடைய தந்தை ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவில் தான் உன்னுடைய படம் வெற்றி அடைகிறது என ஐஸ்வர்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் பிரிந்த பின்பு தனி தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தொடர்ந்து இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்கான இரண்டு குடும்பத்தினர் பேச்சுவரத்தை நடைதினார்கள்.

ஆனால் இருவரும் பிடிவாதமாக மீண்டும் இணைவதில்லை என உறுதியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் தங்களுடைய இரண்டு குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இணைந்து வாழலாம் என்கின்ற முடிவுக்கு வந்தனர் பிரிந்த ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர். இதனை தொடர்ந்து சென்னை ஆர்யாபுரத்தில் உள்ள தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் ரகசியமாக அவ்வப்போது வந்து தங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தனுஷ் பிறந்தநாள் அன்று ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் மீண்டும் இணைத்துவிட்டோம் என அதிகாரபூர்வமாக வெளி உலகுக்கு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஐஸ்வர்யாவும் கணவர் பிறந்த தினம் அன்று இந்த அறிவிப்பை வெளியிடலாம் என திட்டமிட்டு இருந்துள்ளார். இந்த சூழலில் மனைவி ஐஸ்வர்யாவிடம் சவால் ஒன்றை விடுத்துள்ளார் தனுஷ்.

அதாவது சமீப காலமாக தொடர் தோல்வியை சினிமாவில் சந்தித்து வரும் தனுஷ், மனைவியுடன் இணைந்த பின்பு திருசிற்றம்பலம் படம் வெளியாகி வெற்றி பெற்றால், அது மீண்டும் மனைவியுடன் இணைந்ததால் தான் என்கிற விமர்சனம் வரும். அதனால் யாருடைய தயவில் தான் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருசிற்றம்பலம் படத்தை வெற்றி அடைய செய்துவிட்டு இருவரும் இணைவதை வெளி உலகுக்கு தெரியப்படுத்தலாம் என சவால் விடுத்துள்ளார் தனுஷ்.

அதாவது ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதற்கு முன்பு, தந்தை ரஜினியால் சினிமாவில் நிலைத்து நிற்க தனுஷ் காரணம் என் ஐஸ்வர்யா பேசியிருந்த நிலையில், சினிமாவில் எனக்கென ஒரு தனி அங்கீகாரம் இருக்கின்றது. ரஜினியை நம்பி நான் சினிமாவில் இல்லை என்பதை நிரூபித்த பின்பு தான் மனைவியுடன் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன் என சவால் விட்ட தனுஷ்,

அதன்படி திருச்சிற்றம்பலம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த பின்பு, சமீபத்தில் மூத்த மகன் யாத்ரா பள்ளி நிகழ்ச்சியில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை, தனுஷ் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் உன் தந்தை ரஜினியை தயவில் நான் இல்லை என்பதை மனைவி ஐஸ்வர்யாவிடம் சவால் விடுத்து, சொன்னது போல் சொல்லி அடித்து வெற்றியும் பெற்றுவிட்டார் தனுஷ் என்கின்றது சினிமா வட்டாரம்.

மணிரத்தினத்திற்கே நம்பிக்கை இல்லை… பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் பரிதாபம் என்ன தெரியுமா.?