போர்ஜரி செய்து போயஸ் கார்டனில் வீடு கட்டிய தனுஷ்… ஏமாற்றி கோடி கோடியா தனுஷ் வாங்கியது அம்பலம்…

0
Follow on Google News

நடிகர் தனுஷ், அவருடைய மாமனரான ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீடு அருகில், பல கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பிரம்மாண்டமான பங்களா வீட்டை கட்டியுள்ளார். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போயஸ் கார்டனில் நானெல்லாம் வீடு கட்டக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி, போயஸ் கார்டனில் வீடு கட்டும் ஆசை எப்படி வந்தது என்பதற்கும் ஒரு கதை சொல்லியிருந்தார்.

இந்நிலையில், மறுபடியும் சினிமா வட்டாரத்தில், தனுஷ், போயஸ் கார்டனில் இப்படிதான் வீடு கட்டினாரா என பல தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி, அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல், தெலுங்கில் உருவாகி வரும் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்று, தயாரிப்பாளர் சங்கத்தை சில தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

இதனால் நடிகர் தனுஷ் இதுவரை அட்வான்ஸ் வாங்கி இன்னும் நடித்துக் கொடுக்காத படங்களில் எல்லாம், முதலில் நடித்த முடித்த பிறகுதான், புது படங்களில் நடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும், அதுவரை தனுஷ் வேறு எந்த படங்களிலும் புதிதாக கமிட்டாக கூடாது என்றும், அதேபோல் யாராவது தனுசை வைத்து படம் இயக்க நினைத்தாலும் முதலில் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசித்த பிறகு தான் இயக்க வேண்டும் என்றும், தனுஷ் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டது.

இதற்கு காரணமே, நடிகர் தனுஷ், போயஸ் கார்டன் வீட்டை, அவரின் சொந்த உழைப்பில் தான் கட்டியதாக, மார்தட்டி சொல்லிக்கொண்டாலும், அந்த வீடு கட்டிய அனைத்து பணமும், மற்ற தயாரிப்பாளர்களை ஏமாற்றி அட்வான்ஸ் வாங்கிய பணம்தான் என தெரிய வந்திருக்கிறது. நடிகர் தனுஷுக்கு வீடு கட்ட ஆரம்பித்தபோதிருந்தே நிதி நெருக்கடி ஏற்பட்டதால், சில சினிமா நிறுவனங்களிடமும்,

தயாரிப்பாளர்களிடமும், நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன், அதோடு மொத்தமாக, மூன்று, நான்கு படத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறேன் எனக் கூறி, எனக்கு ஒரு தொகையை அட்வான்ஸ் ஆக கொடுங்கள், நான் சேர்த்து கொடுத்து விடுகிறேன் என நம்பிக்கை வாக்குறுதி அளித்திருக்கிறார். அப்போது அந்த தயாரிப்பு நிறுவனங்களும்,

நடிகர் தனுஷ் பெரிய ஹீரோ என்பதால், அவரை வைத்து படம் எடுத்தால் நல்ல ரீச் கிடைக்கும் என நம்பி பெரும் தொகையை தனுசுக்கு அட்வான்ஸாக கடன் வாங்கி கொடுத்திருந்திருக்கின்றனர். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக ஐந்து படத்திற்கு நடிகர் தனுஷ் அட்வான்ஸ் தொகையை வாங்கியிருக்கிறார். ஆனால் இன்றுவரை அவர்களின் படத்தில் நடித்து கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல், இவர் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

அதோடு இந்த பணத்தை கொடுத்தது, சத்தியஜோதி பிலிம்ஸ் மற்றும் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் ஆகிய தயாரிப்பாளர்கள் தான் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது 5ஸ்டார் கதிரேசன் தான், தனுசை வைத்தே பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படத்தை இயக்கியிருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு, 50 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறார்.

ஆனால் அவருக்கு இன்றுவரை தனுஷ் பணமும் கொடுக்கவில்லை, கால்ஷீட்டும் கொடுக்கவில்லை. இதனால் தான், தனுஷை வைத்து படம் தயாரிக்க வட்டிக்கு பணம் வாங்கி, அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, காலதாமதம் ஆக ஆக தயாரிப்பாளர்கள் தான் வட்டிக்கு மேல் வட்டி கட்டி கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர் என தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் தனுஷ், இப்படி பல தயாரிப்பாளர்களின் அட்வான்ஸ் பணத்தை ஏமாற்றி வாங்கி தான் போயஸ் கார்டனில் வீடு கட்டி இருக்கிறார் என்பது தெரிய வந்ததால், பலரும், தயாரிப்பாளர்கள், இனி தனுஷை வைத்து யாரும் படம் எடுக்கக் கூடாது என கூறியது சரிதான் என்றும் கூறி வருகின்றனர். அதோடு நடிகர் தனுஷும், தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் சினிமா வட்டாரங்கள் அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.