பொடி பையன்.. நான் பார்த்து வளர்ந்தவன்.. சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கிய தனுஷ்… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது நகைச்சுவை கலந்த பேச்சுக்களால், தொகுப்பாளராக இருந்த போதே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து காமெடி நடிகராக சந்தானம் உருவெடுத்தது போன்று சிவகார்த்திகேயனும் சினிமாவில் நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சிவகார்த்திகேயன்,மெரினா என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானர், அடுத்தடுத்து விமல் உடன் இணைந்து ஒரு படம் தனுஷ் உடன் இணைந்து காமெடி பாத்திரம், என நடித்த சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அடுத்தடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படத்தில் டாப் ஹீரோவானார் சிவகார்த்திகேயன்.

தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும் நெருக்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக உருவெடுக்க இருவரும் பிரிந்தனர். ஆனால் தனுஷ் நான் வளர்த்து விட்டவன் என்னுடன் சண்டை போட்டு செல்கிறான், நன்றி கெட்டவன் என்று அப்போதே தனக்கு நெருக்கமான சினிமா நண்பர்களிடம் தனுஷ் பேசியதாக தகவல் வெளியானது. ஒரு கட்டத்தில் சிவகார்திகேயன் தன்னுடைய கடின முயற்சியில் உச்சத்துக்கு சென்று கொண்டே இருந்தார்.

தற்பொழுது ரஜினி, அஜித் ,விஜய் அடுத்தபடியாக நான்காவது இடத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரது மனைவியை விட்டு பிரிந்த பின்பு சோதனை மேல் சோதனையை சந்தித்து வருகிறார். இதற்கு முன்பு சினிமாவில் சரிவை சந்தித்த போதெல்லாம் தனது மாமனார் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் மீண்டு வந்தார். ஆனால் தற்பொழுது அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது.

மேலும் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு, தனுஷ் மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்தது, அவரை வைத்து படம் இயக்க முன்னனி இயக்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர், மேலும் அவருடைய படத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் டெக்னீசியன் மற்றும் துணை நடிகர்கள் பாதியிலே ஓட்டம் எடுத்து வருகின்றனர், மேலும் நடிகைகள் அனைவரும் ஐயயோ…தனுஷ் உடன் ஜோடியா.. வேண்டவே வேண்டாம் என தெறித்து ஓடுகின்றனர்.

இப்படி சினிமாவில் பல்வேறு சோதனைகளை சந்தித்து வரும் தனுஷ் சமீபத்தில் தனக்கு நெருங்கிய சினிமா நண்பர்களுடன் இரவு பார்ட்டி ஒன்றில் மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தற்போது சினிமாவில் தான் சந்திக்கும் பிரச்சனைகளை மது போதையில் வேதனையுடன் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். அதற்கு நண்பர்கள் இதெல்லாம் தற்காலிகம் தான், விரைவில் மீண்டும் நீ வெற்றி பெறுவாய் என சமாதானம் செய்துள்ளார்கள்.

அப்போது ஒரு நண்பர் சிவகார்த்திகேயன் பற்றி பேச, அதுவரை வேதனையுடன் பேசிய தனுஷ் தீடிரென கோபப்பட்டு, நான் பார்த்து சினிமாவுக்கு வந்தவன், பொடி பையன் என்னுடைய தயாரிப்பில் அவன் எதிர்நிச்சல் படத்தில் நடித்த பின்பு தான் அவனுக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது, நான் செய்த நன்றியை மறந்து அவனுடைய பத்தாண்டு சினிமா நிறைவு செய்ததற்கு யார் யாருக்கோ நன்றி சொன்னவன்,

என் பெயரை குறிப்பிட்டு ஒரு நன்றி கூட சொல்லாத நன்றி மறந்த அவனெல்லாம் ஒரு மனிதன் என்று அவனை பற்றி நீங்க பேசலாமா.? என தனுஷ் டென்ஷனான உடனே அவரது நண்பர்கள் பேச்சுவார்த்தையை திசை திருப்பி தனுஷை சமாதனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சிவகார்த்திகேயன், அவருக்கு வேறு வேலை இல்லை என அசால்ட்டாக கடந்து சென்றதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?