நீ தான் காப்பாற்ற வேண்டும்.. மனைவி தங்கையிடம் கதறிய தனுஷ்..! சௌந்தர்யா என்ன செய்ய சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் சுமார் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பல நடிகைகளுடன் தொடர்ந்து தனுஷ் லூட்டி அடித்து வந்ததால் ஏற்பட்ட உச்சகட்ட கருத்து வேறுபாடு தான் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதற்கு காரணம் என கூறப்படும் நிலையில், பிரிந்த இந்த தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்க ரஜினிகாந்த் குடும்பத்தினர் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியது.

தனுஷ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வரை ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு பணிந்து தான் இருந்துள்ளார், சமீப காலமாக தான், சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பின்பு, தான் எந்த விதத்திலும் மனைவி ஐஸ்வர்யாவுக்கு குறைந்தவன் இல்லை என்கிற தோரணையில், நான் அப்படி தான் எனக்கு பிடித்த நடிகைகளுடன் லூட்டி அடிப்பேன், இதெல்லாம் நீ கண்டு கொள்ளாமல் தான் இருக்க வேண்டும் என்கிற தோரணையில் மனைவியிடம் தனுஷ் நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிந்தது ரஜினிகாந்த்க்கு மிகுந்த வேதனையை கொடுத்ததை தொடர்ந்து, தங்கள் கௌவுரவத்தை விட்டு கொடுத்து எவ்வளவு தூரம் கீழே இறங்கி வந்து தனுஷிடம் பேச முடியுமோ, அந்த அளவுக்கு பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ரஜினிகாந்த் குடும்பத்தினர், ஆனால் தனுஷ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து தனுஷுக்கு எதிரான வேலைகளை தொடங்கினர் ரஜினிகாந்த் குடும்பத்தினர்.

இதில் தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் தனுஷ் அடுத்தடுத்து படங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதபடி தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டார் லதா ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் குடும்பத்துக்கு உதவும் வகையில் தமிழில் பிரபல பைனான்சியர் அன்புசெழியன் இனி தனுஷ் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்ய கூடாது, மேலும் அவர் நடிக்கும் படங்களின் விநியோகம் செய்யக்கூடாது என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் அளவுக்கு பெரும் நெருக்கடியில் இருக்கும் தனுஷ், இனி தனது மாமியார் லதா ரஜினிகாந்த் மனது வைத்தால் தான் நெருக்கடியில் இருந்து விடுதலை பெற முடியும் என உணர்ந்த தனுஷ், ரஜினிகாந்த் குடும்பத்தினரிடம் சமாதானம் பேச முடிவு செய்து, ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌந்தர்யா உடன் தனக்கு இருந்து பழைய நெருக்கத்தை மனதில் வைத்து அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் தனுஷ்.

மாமியார் லதா தனக்கு கொடுத்துள்ள நெருக்கடி குறித்து மனம் நொந்து வேதனையுடன் மனைவியின் தங்கை சௌந்தர்யா உடன் கதறியுள்ளார் தனுஷ். மேலும் அம்மா லதாவிடம் பேசி என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்றும், நீ நினைத்தால் நிச்சயமாக என்னை நெருக்கடியில் இருந்து விடுவிக்க முடியும் என்று தனுஷ் பேசியதாக கூறப்படும் நிலையில், மௌனமாக தனுஷ் பேசியதை தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்த சௌந்தர்யா.

தனுஷிடம், தான் என்னுடைய கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கி எனக்கும் எனது கணவருக்கும் இடையில் பிரச்சனையை உருவாக்க வேண்டாம், தயவு செய்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டாம் என பதிலளித்து தொலைபேசியை துண்டித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது கடும் நெருக்கடியில் இருக்கும் தனுஷ், விரைவில் அங்க சுத்தி, இங்க சுத்தி மனைவி ஐஸ்வர்யா என்ன சொன்னாலும் கேட்க தயார் என மனைவியிடம் சரண்டராவார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடதக்கது.

இரவு பார்ட்டி…. ஒரே பப்பில் ஐஸ்வர்யா – தனுஷ் ..! இணைந்து விட்டார்களா பிரிந்த தம்பதியினர்..