தனுஷ், லோகேஷ் வெற்றிக்கு காரணமாக இருக்கும் கருங்காலி மாலை … இதை அணிவதால் நடக்கும் அற்புதம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

மற்ற மரங்களை விட கருங்காலி மரம் மிக முக்கியமான மரமாக தான் பார்க்கப்படுகிறது, காரணம் கருங்காலி மரம் பிரபஞ்ச சக்தியை அதிகமாக ஈர்த்து, ஒவ்வொரு பாசிட்டிவ் சக்தியை கருங்காலி மரம் ஈர்த்து வைத்துள்ளது. அந்த வகையில் கருங்காலி மரத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்துகின்றவர்களுக்கும் அந்த பாசிட்டிவ் எனர்ஜி உருவாகிறது.

ஆன்மீகம் பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் கருங்காலியின் மகத்துவம் அறிந்த பலர் கருங்காலி மாலையை அணிய தொடங்கி வருகிறார்கள். குறிப்பாக பிரபலங்களான நடிகர் தனுஷ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூரி போன்ற சினிமா துறையினரும் கருங்காலி மாலையை தொடர்ந்து அணிவித்து வருகிறார்கள். கருங்காலி மாலை அணிவிப்பதால் எவ்வளவு கோபக்காரர்களாக இருந்தாலும், அந்த மாலையை அணிவிக்கின்றவர்களை ஒரு அமைதியான மனநிலையிலேயே அவர்களை கருங்காலி மாலை வைத்திருக்கும்.

அதே போன்று கருங்காலி மாலையை அணுவிக்கின்றவர்கள் செய்கின்ற எந்த செயல்களையும் நேர் மறையாக செய்ய முடியும், மேலும் அவர்களுக்குள் ஒரு பாசிட்டிவ் எண்ணங்கள் தோன்றப்பட்டு தொடர்ந்து அவர்கள் செய்கின்ற வேலையை நேர்மாறாக செய்யும் போது,அவர்களின் செய்ய கூடிய செயல் அவர்களுக்கு வெற்றியை பெற்று தருகிறது.

மேலும் கருங்காலி மாலை அணிவிக்கின்றவர்கள் மீது வேறு யாராவது கோபத்திலோ அல்லது பகையிலோ இருந்தாலும் கூட, இவர்கள் அணிந்திருக்கும் கருங்காலி மாலை எதிர் தரப்பில் இருப்பவர்களை அமைதி அடையச் செய்து ஒருவித சமரசத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர் ஆன்மீகவாதிகள், அதே போன்று பில்லி சூனியம் போன்ற செய்வினைகள் வைத்தால் கூட கருங்காலி மாலை அணிவிக்கின்றவர்களுக்கு எந்தவித தாக்கமும் ஏற்படாது என்றும்.

பில்லி சூனியத்திலிருந்து அவர்களை கருங்காலி மாலை காக்கும் என்கின்றனர் கருங்காலி மாலை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், கருங்காலி மரம் மற்ற மரங்களை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும், அதன் வெளிப்புறத் தோற்றம் வெள்ளையாகவும் , அந்த மரத்தின் நடுப்பகுதி ஒரு தண்டு போல கருப்பாக இருக்கும் . இது சித்தர்கள் முனிவர்கள் வாழ்ந்த காலத்தில், இந்த மரம் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்து அந்த மரத்தின் அடியில் தியானம் செய்தாலும் அல்லது அந்த மரத்தினாலன பொருளை கையில் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு வித பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதை உணர்ந்துள்ளார்கள்.

அதேபோன்று கருங்காலியை இந்த ராசிக்காரர்கள் தான் அணிய வேண்டும், இந்த நட்சத்திரக்காரர்கள் தான் அணிய வேண்டும் என்கின்ற கட்டுப்பாடும் கிடையாது, மேலும் அனைத்து மதத்தினரும் இந்த கருங்காலி மாலையை அணிவிக்கலாம், கருங்காலியின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் இதை மதரீதியாக யாரும் பார்ப்பது கிடையாது, ஆனால் கருங்காலியை இரவு தூங்குவதற்கு முன்பு கழட்டி வைத்துவிட்டு மறுநாள் குளித்துவிட்டு தான் அந்த கருங்காலியை போட வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் சில அறிவுரையும் வழங்குகிறார்கள்.

அதே நேரத்தில் கருங்காலியை புதியதாக அணிவதற்கு முன்பு பூஜை செய்யவேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்திடம் சென்று, பாலில் முக்கி எடுத்து நீங்களே கருங்காலி மாலையை அணிந்து கொள்ளலாம், கருங்காலி மாலை புதியதாக வாங்குவதற்கு முன்பு பல கைகளை கடந்து வந்திருக்கும் என்பதால் தான் பாலில் முக்கி எடுத்து புதியதாக அணிகின்ற்றவர்கள் அந்த மலையை அணிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள்.