போதையில் எடுத்த விபரீத முடிவு… மனம்விட்டு பேசிய தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி.. 150 கோடி வீடு யாருக்கு.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் பிரிவதாக தனித்தனியாக அறிவிப்பை வெளியிட்டு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, குழந்தைகள் நலன் கருதி இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்காக இரு குடும்பத்தினரும் நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் மூலமாக இருவருக்கும் இடையில் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு, இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அதிகாரபூர்வமாக தங்கள் இணைந்து விட்டோம் என்று அறிவிக்கவில்லை என்றாலும் கூட, சென்னை ஆர்யாபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் அடிக்கடி ரகசியமாக அங்கே வந்து தங்கி வருவதாக தகவல்களும் வெளியானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினரின் மூத்த மகன் யாத்ரா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியரின் திருமண நாள் அன்று இவர்கள் இருவரும் இணைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்கள் பிரிவதற்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் வீடு கட்டி வந்தார்.இந்த வீடு கட்டுவதற்கு பெரும் தொகையை ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது.

தற்பொழுது போயஸ் கார்டனில் 150 கோடி ரூபாயில் பிரமாண்ட முறையில் கட்டி வரும் வீட்டின் கட்டிடத்தின் வேலைகள் நிறைவடைந்து உள்ளது. புதிய வீட்டின் பர்னிச்சர் வேலைகள் நடந்து வரும் நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் போயஸ் கார்டன் வீட்டிற்கு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் குடியேற உள்ளனர் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளனர். இவர்கள் இருவரும் அதிரடியாக பிரிவதற்கு முக்கிய காரணம் இருவரும் போதையில் இருந்ததுதான் என தகவல் ஒன்று வெளியாகிறது.

தனுஷ் ஆந்திராவில் வாத்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார், அப்போது ஐஸ்வர்யாவும் மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணியில் ஆந்திராவில் இருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கி இருந்தபோது இவர்கள் பிரிவதாக அறிவித்ததற்கு முதல் நாள் இருவருமே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் இருவரும் தங்கியிருந்த ஒரே அறையில் கடுமையாக சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியில் இருவரும் பிரிந்து விடுவோம் என்கின்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்த நாள் நள்ளிரவு ஐஸ்வர்யா-தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டனர். தற்பொழுது சமீபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது போதையில் எடுத்த விபரீத முடிவுதான் தற்பொழுது நம்முடைய மற்றும் பிரிவு காரணம் என்று மனம் விட்டு பேசிய தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிகள், தப்பு செய்துவிட்டோம் என்று மனம் வருந்தியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது

பிரபு தேவா செய்த அட்டூழியம்… நயன்தாரா கர்ப்பபை குறித்து மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..