போதையில் இருவரும் தப்பு செய்து விட்டோம்… தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் வேதனை… என்ன தப்பு தெரியுமா.?

0
Follow on Google News

துள்ளுவதோ இளமை படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் தனுஷ் தொடர்ந்து மூன்று படங்கள் வெற்றியை கொடுத்து, குறுகிய காலத்தில் பிரபலமான தனுஷ், அடுத்த ஜஃபாட் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து ரஜினிகாந்த் மருமகனானது. இதன் பின்பு ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உயரத்துக்கு சென்ற தனுஷ், சினிமாவில் சரிவை சந்தித்த போதெல்லாம் ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் தான்கென ஒரு இடத்தை பிடித்த தனுஷ், இரவு பார்ட்டி, சக நடிகையுடன் லூட்டி என அவர் ஒரு பக்கம் செல்ல, மறுப்பக்கம் அவருடைய மனைவி ஐஸ்வர்யா, தோழிகளுடன் அடிக்கடி வெளிநாடு சென்று ஷாப்பிங் செய்வது, அவரும் இரவு பார்ட்டி என இருவரும் வாழ்க்கையில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாழ்ந்து வந்தனர். இதில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இருவரும் கடந்த 5 மாதங்களாக பிரிந்து வந்த நிலையில் இருவரும் தற்பொழுது சமாதானமாகி அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வருவதாகவும், மேலும் இவர்களுக்கு சொந்தமான சென்னை அரியபுரத்தில் உள்ள வீட்டிற்கு இருவரும் அடிக்கடி வந்து போவதாக கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டாலும், அடுத்த ஒரு சில நாட்களில் இருவரும் பேசி சரி செய்துகொன்டு மீண்டும் இணைந்து விடுவார்கள், ஆனால் கடந்த ஜனவரி 17ம் தேதி திங்கள் கிழமை இரவு இருவரும் பிரிவதாக அறிவித்த போது, ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனி தனி அறையில் இருந்து கொண்டு தான் இருவரும் ஒரே மாதிரியான அறிவிப்பை அவரவர் பெயரை மட்டும் மாற்றி கொண்டு வெளியிட்டது தெரியவந்தது.

ஆனால் இவர்கள் பிரிவதாக அறிவிப்பதற்கு அன்று முதல் நாள் வரை அதே ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்ததாக தகவல் வெளியானது, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் ஒரே அறையில் தங்கி அவர்கள் சினிமா வேலைகளை செய்துவந்த நிலையில், ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இரவு மது விருந்தில் கலந்து கொண்டவர்கள், மது விருந்து முடிந்து அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது வழக்கம் போல் ஏற்படும் சண்டை இவர்கள் இருவருக்கும் இடையில் தொடங்க, வழக்கத்துக்கு மாறாக தனுஷ் கடுமையாக பதில் கொடுத்துள்ளார். இதற்கு ஐஸ்வர்யாவுக்கு பேசி சண்டையிட்டுள்ளனர். இருவரும் போதையில் இருந்ததால் இவர்கள் சண்டை உச்சகட்டத்தை அடைத்ததாக கூறப்படுகிறது. அன்று இரவு முழுவதும் நடந்த சண்டையில் இனி நீ தேவையே இல்லை என ஒருவருக்கொருவர் தெரிவித்து விட்டு அடுத்தநாள் 16ம் தேதி காலை ஐஸ்வர்யா அதே ஓட்டலில் தனி அறைக்கு சென்றுள்ளார்.

இதன் பின்பு இருவரும் 16ம் தேதி இரவு ஒரு முறை பேசியவர்கள், இருவரும் பிரிந்து விடுவோம் என முடிவு செய்து 17ம் தேதி இரவு இருவரும் பிரிவதாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ரகசியமாக இணைந்துள்ள தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர், மது போதையில் இருவருக்கும் நடந்த சண்டையில் ஒருவரை ஒருவர் கடுமையாக பேசியதை நினைந்து இருவரும் ஒருவருக்கொருவர் வேதனையை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

போதையில் மிதக்கும் கீர்த்தி சுரேஷ்… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு… என்னாச்சு கீர்த்தி சுரேஷ்க்கு தெரியுமா.?