அரைமணி நேரம் கேரவன் உள்ளே தனுஷ் – அமலா பால்… திருமணம் முடிந்து 8 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது.?

0
Follow on Google News

நடிகை அமலா இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்காக கிளாமரில் இறங்கிய அமலாபால்க்கு, கிளாமரும் கைகொடுக்க வில்லை. மேலும் சொந்தமாக ஒரு படத்தையும் தயாரித்தும் தோல்வியை தான் தழுவினார் அமலாபால்.

இந்நிலையில் அவருக்கு கிளாமரும் கைகொடுக்கவில்லை, சொந்தமாக தயாரித்த ஒரு படமும் தோல்வியை தழுவி, மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது.இதன் பின்பு கடும் மன உளைச்சலுக்கு ஆளான அமலாபால், தன்னுடைய மன அமைதிக்காக ஆன்மீகம் பக்கம் சென்றார். யோகா, ஆன்மீகம் என தன்னை முழுமையாக ஆன்மீகம் பக்கம் அர்ப்பணித்து கொண்ட அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் காதலன் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை அமலாபால் – ஜெகத் தேசாய் இருவரும் திருமணம் செய்து கொண்ட 8 மாதத்தில் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. இப்படி தொடர்ந்து அமலா குறித்து இயக்குனர் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டது, தொடங்கி, இடையில் தனுஷ் உடன் கிசு கிசு, பின்பு தனுஷ் விவாகரத்து சர்ச்சையில் அமலாபால் பெயர் அடிபட்டது வரை தொடர்ந்து மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நடிகை அமலாபால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அமலா பால் திருமணம் முடிந்து 8 மாதத்தில் குழந்தை பிறந்ததால், திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்து விட்டாரா அமலா பால், என்கிற ஒரு பரபரப்பும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது.

அதே நேரத்தில் திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியை அமலாபால் வெளிப்படுத்தி இருந்த போது, அமலாபால் கர்ப்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அப்போதே சந்தேகங்களை கிளப்பி இருந்தார் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், திருமணத்துக்கு முன்னர் ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த அமலாபால்,

ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே அது நடந்து கர்ப்பம் ஆகியிருப்பாரோ என சந்தேகம் வருவதாக பயில்வான் ரங்கநாதன் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் தற்பொழுது அமலா பால் திருமணம் முடிந்து 8 மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது, ஏற்கனவே பயில்வான் ஏற்படுத்தி இருந்த பரபரப்புக்கு தீனி போடும் வகையில் அமைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் ஒரு பேட்டி ஒன்றில் பேசுகையில், அமலா பால் சினிமா கேரியரில் தனுசுடன் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பேர் வாங்கி கொடுத்தது என தெரிவித்தவர், அதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது என்று, அதாவது வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலா பால் கேரக்டரில் நடிக்க முதலில் வேறு ஒரு நடிகையை நடிக்க கமிட் செய்யப்பட்டிருந்ததார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த தனுஷை சந்திக்க வந்த நடிகை அமலாபால், நடிகர் தனுஷ் மற்றும் அமலாபால் இருவரும் படப்பிடிப்பில் இருந்த கேரவனில் சுமை 30 நிமிடங்கள் வரை பேசியவர், அதன் பின்பு கேரவனை விட்டு வெளியே வந்த போது வேலையில்லா பட்டதாரி படத்தின் நாயகி அமலாபால் தான் என உறுதி செய்யப்பட்டு, அந்த படத்தின் அமலா பால் கமிட்டானதாக தெரிவித்த சபிதா ஜோசப், அந்தப் படத்தில் தனுஷூடன் அமலா பால் நெருக்கமாக நடித்ததும் பேசுபவர்களாக மாறியது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here