யாருக்குமே குழந்தைகள் வேண்டாமா.? தனுஷ் – ஐஸ்வர்யா பொறுப்பற்ற முடிவால் பரிதவிக்கும் இரண்டு மகன்கள்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த அன்று, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஆந்திராவில் ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் இரண்டு மகன்களும் சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த வீட்டில் இருந்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஐஸ்வர்யா தாய் லதாவிடம் தான் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் சினிமாவில் பிசி, மறு பக்கம் ஐஸ்வர்யா ஷாப்பிங் செய்வது, தோழிகள் உடன் ஓர் சுற்றுவது என பிசியாக இருந்து வந்தார். இப்படி இருவரும் பிசியாக இருந்து வந்ததால் இரண்டு மகன்களும் பெரும்பாலும் ஐஸ்வர்யா தாய் லதா உடன் தான் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஐஸ்வர்யாவும் கணவர் சினிமாவில் பிசியாக இருப்பதால் பெரும்பாலும் தாய் வீட்டில் தான் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் இரண்டு மகன்களும் தாய் ஐஸ்வர்யாவிடம் இருக்க போகிறார்களா.? அல்லது தந்தை தனுஷ் உடன் இருக்க போகிறார்களா.? அந்த இரண்டு குழந்தைகளின் முடிவு என்ன என்கிற பரபரப்பு நிலவி வரும் நிலையில், தாய் ஐஸ்வர்யா மற்றும் தந்தை தனுஷ் இருவருமே இரண்டு மகன்களை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை என கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் மீண்டும் இணைத்து வைக்கும் முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படும் நிலையில், குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என இருவரிடம் கேட்ட போது, தனுஷ் இரண்டு பிள்ளைகளையும் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க வைத்து கொள்கிறேன் என தெரிவித்ததாக கூற படுகிறது, அதே பதிலை ஐஸ்வர்யாவும் தெரிவித்ததாக கூறபடுகிறது.

இந்நிலையில் இருவரும் தங்கள் பிள்ளைகளுக்காக எதையுமே தியாகம் செய்ய தயாராக இல்லை என்றும், அவர்களின் சுதந்திரத்துக்கு தடையாக குழந்தைகள் இருந்து விட கூடாது என்பதற்காக ஹாஸ்டலில் சேர்க்கும் முடிவில் உள்ளனர் என இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய இருவருக்கும் நெருக்கமானவர்கள் வெளியில் வருத்தத்துடன் தெரிவித்து வரும் நிலையில், தாய், தந்தை பாசத்துக்காக தனுஷ் – ஐஸ்வர்யா இரண்டு குழந்தைகளும் பரிதவித்து வரும் நிலையில்,

தற்போது இருப்பது போன்று இரண்டு குழந்தைகளும் போயஸ் கார்டனில் ஐஸ்வர்யா தாய் லதா உடனே வளரட்டும், அவர் தந்தைக்கு எப்போதெல்லாம் அவருடை இரண்டு மகன்களை பார்க்க வேண்டும் என விருப்பம் இருக்கிறதோ எங்கே எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், குழந்தைகள் அவரிடம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தனுஷ்- ஐஸ்வர்யா இருவரின் நெருக்கமானவர்கள் மூலம் பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.