நடிகர் பாலா பின்னணியில் தாடி பாலாஜி… மக்களுக்கு கோடி கோடியா அள்ளி கொடுக்க காரணமே தாடி பாலாஜி தானம்..

0
Follow on Google News

கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டது. அப்போது மக்களுக்கு பல உதவிகளை பாலா செய்துள்ளார். கலக்கப்போவது பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் குடும்பத்திற்கு குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார்.

மேலும் சீட்டு போட்ட பணம் 2 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என அனைத்தையும் மக்களுக்காக கொடுத்தார். ஏற்கெனவே பாலா பல உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கி வைத்திருந்தார். தன்னால் இயன்ற உதவிகளை எளியோர்களுக்கு செய்துவரும் பாலாவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றினை போட்டு இருந்தார். அதில் தனது விரல் அடிபட்ட புகைப்படத்தை வெளியிட்டு, மனம் நிறைந்தது… விரல் உடைந்தது… நன்றி என்று கூறியுள்ளார். அவரது பதிவின் கீழ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிராத்தனை செய்து வருகிறார்கள். மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு பாலா நிவாரண பணியில் ஈடுபட்டு வந்த போது அவரது விரல் உடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

பாலா முன்னணி நடிகர்களுக்கு கூட இல்லாத அளவுக்கு பெரிய மனசுடன் செயல்பட்டு வருவது மக்களால் பாராட்டப்பட்டு வந்தாலும், சிலர் பாலா ஏதோ ஃபிராடு செய்கிறார் என்பதை போலவே விமர்சிக்க ஆரம்பித்து வருகின்றனர். மேலும், அவருக்கு பின்னணியில் அரசியல் சப்போர்ட் இருப்பதாகவும் கூறுகின்றனர். சிலரோ விளம்பரத்திற்காக பாலா இதைச் செய்தாரா என சந்தேகிக்கலாம். ஆனால் அது உண்மையல்ல.

ஏற்கனவே சில மாதங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருந்தார். எனவே பாலா மக்களின் பாராட்டுகளுக்கு உகந்தவரே. சமூக வலைதளங்களில் வெட்டியாகக் குறை கூறும் நபர்களுக்கு மத்தியில் சக மனிதனின் சிரமத்தை உணர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்த பாலா இந்த மிக்ஜாம் புயலில் மக்களுக்கு உதவிய ஹீரோக்களில் ஒருவர் என்று கூறுவது மிகையல்ல.

இன்னிலையில் பாலா குட்டி ஹீரோவாக பெரிய மனம் கொண்டவராக மாறி வரும் நிலையில், அவருக்கே தாடி பாலாஜி உதவி செய்திருப்பதாக பாலாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆரம்பத்தில் நல்ல துணி கூட போட்டுக்க இல்லாமல் இருந்த தனக்கு தனது நண்பர் ஒருவரை போய் சந்திக்க தாடி பாலாஜி அண்ணா சொன்னார். அவரிடம் போனால் ஒரு பை நிறைய புதிய துணிகளை தாடி பாலாஜி கொடுக்க சொன்னதாக சொல்லிக் கொடுத்தார்.

விஜய் டிவியில் இருக்கும் போது தாடி பாலாஜி அண்ணா எனக்கு செய்த உதவி தான் நாமும் காசு வந்தால் சேர்த்துக்கிட்டே போகக் கூடாது என்றும் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் நல்லா இருக்கலாம் என என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த நிலையில் கலக்கப்போவது யாரு பாலாவுக்கு தாடி பாலாஜி உதவி செய்தது போன்று, இது பலர் சினிமாவில் ஆரம்பகாலத்தில் கஷ்ட்டப்படும் போது பலருக்கு தாடி பாலாஜி உதவி சத்தமே இல்லாமல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, அந்த வகையில் கலக்கப்போவது பாலா போன்று தாடி பாலாஜியும் கருணை உள்ளம் படைத்த கடவுள் தான்ப்ப்பா என பலரும் தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..