சொகுசு ஓட்டலில் கே.ராஜன் பற்றிய ரகசியத்தை போட்டு ஓடைத்த பயில்வான்..! இந்த வயதில் இப்படியா.?

0
Follow on Google News

தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பயில்வான் மீது கே.ராஜன் போலீசில் புகார் தெரிவிக்க, பதிலுக்கு கே.ராஜன் மீது பயில்வான் புகார் தெரிவித்துள்ளார். மேலும் கே.ராஜன் குறித்து புகார் தெரிவித்த பின்பு பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது. நான் சவால் விடுகின்றேன், அந்த கே. ராஜன் என்னை நடிகைகளை பிளாக்மெயில் செய்து பத்தாயிரம் ஐம்பதினாயிரம் பணம் வாங்கியதாக சொல்கிறார்.

நான் சவால் விடுகிறேன், மவனே… நான் யாரிடமாவது பிளாக் மெயில் செய்து பணம் வாங்கினேன் என்று நீ சொன்னால், நான் என்னுடைய தொழிலை விட்டு செல்கிறேன். நீ நிர்வாணமாக நடந்து செல்வாயா.? சவால் விடுகிறேன், நான் சைபர் கிரைமில் அந்த ஆள் மீது புகார் தெரிவித்துள்ளேன். இதோ சிசி காபி, நான் யூட்யூபில் பொய் பேசினால் என்னை யாரும் பின்தொடர மாட்டார்கள். மில்லியன் கணக்கில் என்னை பின்தொடர்பவர்கள் இருக்கின்றார்கள்.

கமிஷனர் ஆபீஸில் நான் உள்ளே இருக்கும்போது, போலீஸ் அதிகாரிகள், சார் பின்னிப் பெடல் எடுத்து விட்டீர்கள் சார், பிரமாதமாக இருக்கு சார், உங்க நிகழ்ச்சி அனைத்தும். சினிமாவைப் பற்றி உங்களிடம் தான் சார் கேட்க வேண்டும், அந்த அளவுக்கு தான் நான் நடந்து கொண்டிருந்தேன். உண்மையைத் தவிர நான் எதையும் பேசுவதில்லை. வதந்திகளைப் பரப்பும் கிடையாது, பொய்யும் பேசமாட்டேன், நான் அருவாள் வைத்து வெட்டுவேன் என்று ராஜன் புகார் தெரிவித்துள்ளார்.

சத்தியமாக நான் அப்படி சொன்னேன். எந்த சூழலில் நான் சொன்னேன் என்றால், ஒரு யூடியூப் சேனலுக்கு நான் பேட்டி கொடுக்கும்போது, அந்தப் பேட்டி எடுத்தவர், என்னிடம், தொடர்ந்து எப்படி கசமுசா என்று பேசி வருகிறீர்களே, உங்களை 4 பேரு தாக்க வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான், என் கை என்ன புளியங்காய் பறிக்குமா.? அருவாளை எடுத்து வீசி விடுவேன் என்று சொன்னேன். ஏனென்றால் நான் தூத்துக்குடி காரன், எங்கள் பரம்பரையில் இருக்கும் அனைவரின் இடுப்பில் பண்ணை சீறுகின்ற அருவா இருக்கும்.

அப்படி நான் சொன்னது உண்மைதான். என்னை தாக்க வந்தால் நான் சும்மா இருப்பேனா.? 71 வயது ஆனாலும் எனக்கு அந்த தில் இருக்கு. கே ராஜன் சொல்வது அனைத்தும் பொய், என்னை உருவ கேலி செய்கின்றார் பரதேசி, உன் மூஞ்சிய நீ கண்ணாடியில் பாருடா, இதே ராஜனை நான் கேட்கிறேன், உன் மூஞ்சிய கண்ணாடி உள்ள பார்த்தியா.? நீ குடும்பத்தை விட்டுவிட்டு ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருக்கியே.. என்ன காரணம்.? இதுக்கு பதில் சொல்லு, இப்படி நான் கேட்கவா.? அப்புறம் நானும் ஒரு ரேஞ்சுக்கு இறங்கி விடுவேன். அசிங்க அசிங்கமா பேசி இருக்கிறான் கே.ராஜன்.

சினிமாவில் ஒழுக்கமாக வாழ்கின்ற ஒரு சிலரில் நானும் ஒருத்தன். அவரும் யூடியூபில் பேசி வருகிறார் ஆனால் யாரும் பார்க்கவே பார்ப்பது கிடையாது. ஆனால் நான் யூடிபில் பேசினால் லட்சக் கணக்கில் மக்கள் பார்க்கிறார்கள் அந்தப் கடுப்பில் தான் என்னை திட்டுகிறார். அவன் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி போட்டு தோற்று விட்டான். பிறகு ஜாதி சங்கம் ஒன்று வைத்துள்ளான். அந்த ஜாதி சங்கத்தை வைத்துக்கொண்டு மிரட்டுகிறான் என பயில்வான் கடுமையாக பேசினார்.

ரஜினிகாந்த் அதிரடி… சினிமாவில் இனி நடிப்பதில்லை … தீடிர் அமெரிக்க பயணம்..! என்ன காரணம் தெரியுமா.?