பாலாவின் கண்கலங்க வைக்கும் சம்பவம்… கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு விழுந்த சவுக்கடி..

0
Follow on Google News

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் பாலா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக விளங்கி வருகிறார். மேலும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிசி ஆனா ஒரு ஆர்டிஸ்ட் ஆக வரும் பாலா, ஒரு காமெடியனாக பலருக்கும் தெரிந்த நிலையில் தான் சம்பாரிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை உதவி செய்துவிட்டு தம்பட்டம் அடிக்கும் நடிகர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போன்று அமைத்துள்ளது பாலாவின் செயல்.

இதுவரை பல ஆதரவற்ற குழந்தைகளை தன்னுடைய சொந்த செலவில் வளர்த்து அவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் பாலா. இந்த நிலையில் மிக குறைந்த சம்பளமே வாங்கும் பாலா சுமார் 25 குழந்தைகளை வளர்த்து வரும் நிகழ்வு நடிகர் ராகவா லாரன்ஸ் கவனத்திற்கு சென்றுள்ளது. ராகவா லாரன்ஸும் மாற்றுத்திறனாளிகளுக்காக பல உதவிகளை செய்து வருகிறார். மேலும் ஆதரவற்ற பல குழந்தைகளுக்கும் உதவி செய்து வரக்கூடியவர் ராகவா லாரன்ஸ.

இந்நிலையில் பாலாவின் நல்ல முன்னெடுப்பை அறிந்த லாரன்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பாலா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது, பாலா செய்து வரும் உதவிக்கு உறுதுணையாக நண்கொடை அதே மேடையில் லாரன்ஸ் கொடுத்து, பாலா செய்து வரும் நல்ல விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டிய போது தான் பலருக்கு தெரிந்தது பாலாவின் மனிதநேயமிக்க செயல்.

இந்த நிலையில் 100 கோடி 200 கோடி என கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில லட்சங்களை செலவு செய்து செய்யப்படும் உதவிகளை அவர்கள் ஏதோ மிகப்பெரிய வள்ளல் போன்று பேசப்பட்டு வரும் நிலையில், கலக்கப்போவது நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆக அறியப்பட்ட பாலாவின் தந்தை இன்றும் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்து கொண்டிருக்கிறார். இப்படி பொருளாதார பின்னடைவான ஒரு குடும்பத்தில் இருந்து வந்த பாலா,

ஈரோடு அருகில் உள்ள சுமார் 8000 மக்கள் வசிக்கக்கூடிய, பெரும்பாலும் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய ஒரு கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு போதிய வசதியின்றி தவித்து வந்த அந்த மக்களுக்கு, முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த பணத்திலேயே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் பாலா, இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்குவதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் தான் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.

அந்த கிராம மக்கள் மருத்துவமனைக்கு செல்ல கடும் சிரமப்படுவதை அறிந்த பாலா சுமார் ஒரு மாதம் இடைவிடாமல் இரவு பகல் என பாராமல் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒரு ஆம்னி ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு முன் வந்த போது, அங்கிருந்த ஒரு தன்னார்வாளர் பாலாவிடம் இந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனை செல்வதற்கு நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்பதால் ஐ சி யு செட் ஆப்பில் ஆம்புலன்ஸ் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

உடனே அதற்கு பாலா ஐயோ, மேலும் பணம் தேவைப்படுகிறது, இருந்தாலும் நான் செய்து கொடுக்கிறேன் என அடுத்த ஒரு சில நாட்கள் இரவு பகல் பாராமல் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முழுக்க முழுக்க தான் உழைத்து சம்பாதித்து, யாரிடமும் கையேந்தாமல் சொந்த பணத்தில் அந்த சுமார் 8000 மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களுக்கு ஐசியு செட்டப்பில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் பாலா.

இதே நிலையில் பலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சில பகுதியை மட்டுமே உதவி செய்வார்கள் ஆனால் பாலா உதவி செய்வதற்காகவே இன்று சம்பாதித்து வருவது, அதுவும் இரவு பரவல் பாராமல் அவர் உதவி செய்வதற்காக படும் கஷ்டத்தை அறிந்தவர்களை கண்கலங்க வைக்கிறது அவருடைய செயல், ஒரு சிறிய நடிகர் மக்களுக்கு உதவி செய்வதற்காகவே உழைத்து வருவது, கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது.