பப்லு முன்னால் காதலிக்கு கேன்சர்… காதலிக்கிற வயசா இது.? கண்ட படி திட்டிய பப்லு தாய்…

0
Follow on Google News

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான நடிகர் பப்லு ப்ரத்திவிராஜ், சமீபத்தில் அவரது இளம் காதலியான ஷீத்தலை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடவில்லை. இப்படியான நிலையில் பப்லு தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது முதல் காதல் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி, உடற்பயிற்சி, நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் நடிகர் பப்லு, இந்த வயதிலும் அவரது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் முதல் காதல் பூத்ததாகவும், அந்த வயதில் போதிய பக்குவம் இல்லாததால் அது பிரேக்கப்பில் முடிந்ததாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவரது முதல் காதல் குறித்து அவர் கூறியதாவது ; “எனக்கு 19 வயதாக இருக்கும் பொழுது நானும் என் தங்கையும் ஒரு நடன போட்டிக்கு சென்றிருந்தோம், அப்போது மிஸ் இந்தியாவாக இருந்த ஒரு பெண் அங்கு வந்திருந்தார். அந்தப் பெண்ணைச் சுற்றி ஈக்கள் போல மக்கள் கூட்டம் கூடினர். எனக்கும் அந்தப் பெண்ணை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது.

ஆனால் நான் அவரைப் பார்க்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை, எனது பார்வை மீண்டும் மீண்டும் அவளை நோக்கி சென்றது. எனக்கு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவள் ரெட் கலர் ஜீன்ஸ்ம் வெள்ளை கலர் டாப்ஸும் போட்டிருந்தாள். அந்த நடன போட்டியில் நானும் எனது தங்கையும் முதல் பரிசு தட்டிச் சென்றோம்.

போட்டி முடிந்ததும் எனது தங்கை எனக்கு ஒரு ஜூஸ் வேண்டும் என்று என்னிடம் கேட்டாள். நான் அதை வாங்கிக் கொண்டு வந்த போது, திடீரென அந்தப் பெண் என் கண் முன் வந்து நின்றாள். என்னை பார்த்து என் நடனத்தை பாராட்டி பேசினாள். அவள் பேசியதற்கு எல்லாமே நான் தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். தேங்க்ஸ் தவிர உங்களுக்கு வேறு எதுவுமே சொல்லத் தெரியாதா என்று கேட்டாள்.

நான் சற்று பதட்டத்துடன் இல்லை என்று கூறி சமாளித்துக் கொண்டிருந்தேன். உங்களுடன் நான் டான்ஸ் ஆட வேண்டும் என்று கேட்டாள், நானும் ஓகே என்று சொல்லி சம்மதித்தேன். நான் உடனடியாக என் கையில் இருந்த ஜூஸை என் தங்கையிடம் கொடுத்து விட்டு வருவதற்குள், டிஜே பிரேக் விட்டுவிட்டார். பிரேக் முடிந்து மீண்டும் தொடங்கியவுடன் அவளுடன் ஆடலாம் என்று காத்திருந்தேன்.

டிஜே தொடங்கியதும் அவளை தேடினேன். ஆனால் அவள் வேறொரு கேங்கில் ஆடிக் கொண்டிருந்தாள். சரி நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்து விட்டு அங்கிருந்து நானும் என் தங்கையும் கிளம்பினோம். அப்போது அவள் என் பின்புறமாக வந்து என்னை கூப்பிட்டாள். நான் அவளை திரும்பிப் பார்த்தபோது, நான் உங்களுக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் என்று கூறினாள்.

அதை எடுத்து நானும் அவளும் மெய் மறந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆடிக் கொண்டிருந்தோம். இசை நிறுத்தப்பட்டது கூட தெரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் ரசித்தபடி நடனம் ஆடிக் கொண்டிருந்தோம். அந்த நிகழ்வுக்குப் பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டோம். இதனால் எங்களுக்கிடையே ஆன நட்பு காதலாக மலர்ந்தது.

நான் என்னுடைய காதல் விஷயத்தை எங்க அம்மாவிடம் சொன்ன போது, உனக்கு 19 வயது தான் ஆகிறது என்று என்னை திட்டியதோடு அவளைத் தேடிச் சென்று அவளையும் திட்டிவிட்டார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண் இனிமேல் நமக்குள் எதுவும் கிடையாது உங்க அம்மா என்னை அசிங்கமாக பேசி விட்டார் என்று கூறி என்னை பிரேக்கப் செய்தாள். ஆனால் நான் அவள் விட்டுச் சென்றது காக வருத்தப்படவில்லை. போடி மயிறு என்று சொல்லிவிட்டு என் வேலையில் கவனம் செலுத்தி வந்தேன்.

அதன் பிறகு சில மாதங்கள் கழித்து அவளது நண்பர்கள் அவளைப் போய் சந்திக்குமாறு என்னிடம் கேட்டனர். ஆனால் அவள் தானே என்னை வேண்டாம் என்று விட்டுச் சென்றால் நான் ஏன் அவளை போய் பார்க்க வேண்டும் என்று விவாதம் செய்தேன். அப்புறம்தான் அவர்கள் சொன்னார்கள், அவள் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று. பின்னர் சில மாதங்கள் கழித்து அவள் இறந்து போனாள்… ” என்று பப்லு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.