பப்லு மீது தவறில்லை …அடுத்த திருமணத்திற்கு தயாரா.? நடிகை வனிதா ஓப்பன் டாக்…

0
Follow on Google News

முதல் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நடிகர் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்கிற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஷீத்தல் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்து வந்துள்ளார், பின்னர் இவர்களின் நட்பு நெருக்கமாக அது காதலாக மாறியதை தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் பப்லு மற்றும் ஷீத்தல் இருவரும்.

பாப்லு ஷீத்தல் இருவருக்கும் 30 வயது வித்தியாசம், தாத்தா வயசுல இதெல்லாம் தேவையா என பலரும் கேலி கிண்டல் செய்து வந்தனர்.இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு செய்த ரீல்ஸ் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. தற்போது சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பப்லு ப்ரித்விராஜ் கூறுகையில், எனக்கும் ஷீத்தலுக்கும் திருமணமாகவில்லை. நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம்ம் , நான் வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தை இனி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள மட்டேன். எனது வாழ்வைப் பற்றி கேலி, கிண்டல் செய்ய நானே ஏன் வழி கொடுக்க வேண்டும்.

இந்த வயதிலும் என்னை அனைவரும் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இனியும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதை வெளியே கூறி அவனமானத்தை தேடிக்கொள்ள மாட்டேன். முன்பு செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்” என்று பப்லு தெரிவித்துள்ளார். இப்படி இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், பப்லுவுக்கு ஆதரவாக நடிகை வனிதா பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

அதில் வனிதா பேசுகையில், பப்லு, சிறுவயதில் இருந்தே பல பிரச்னைகளை பார்த்து இருக்கிறார். குழந்தைக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார். அது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். கணவனும், மனைவியும் ஏன் பிரிந்தார்கள் என்பது இருவருக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. மத்தியில் இருப்பவர்கள் சொல்வது தேவையற்றது.

அவருக்கு 27 வயது மகன் இருக்கும் போது 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி தேவையற்றது. அவர் தனது மகனை சாலையில் விடவில்லை. இத்தனை வருஷம் பார்த்த அப்பாவுக்கு அது தெரியும். இப்படி ஒரு மகன் இருக்கிறான் என்று நினைத்து தன் சொந்த வாழ்க்கையை வாழக்கூடாது என்று சொல்வது முட்டாள்தனம்.

எனக்கு ஜெயா, ஜோவிகா என்ற குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு நான் பொறுப்பு. ஆனால் அவர்களுக்காக தூங்காமல் சிரிக்காமல் இருக்க முடியாது. எல்லா குழந்தைகளும் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சியாக பார்க்க விரும்புகிறார்கள். பப்லூ பிரித்திராஜ் ஒரு தந்தையாக தனது கடமையை செய்தார். அவர் சோர்வாக இருந்தார். அவர் விரும்பும் ஒருவரைக் கண்டுபிடித்தார். வயது வித்தியாசத்தை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்தது. தோழமையின் வயது என்னவென்று தெரியவில்லை.

வாழ்க்கை கணிக்க முடியாதது, நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியாது. நான் கூட நாளைக்கு பப்லு மாதிரி பண்ணலாம் அது அவங்களோடு பர்சனல்” என வனிதா பேசியுள்ளார். இந்நிலையில் பப்லு 30 வயசு வித்தியாசத்தில் ஒரு பெண்ணுடன் ரெலேசன் சீப்ல் இருந்தது குறித்து வாழ்க்கையில் எண்ணவேண்டுமென்றாலும் நடக்கலாம், நான் கூட பப்லு மாதிரி பண்ணலாம் என வனிதா தெரிவித்துள்ளது, வனிதா தற்பொழுது சிங்கிளாக இருந்து வருவதால், அடுத்த திருமணத்துக்கு தயாராகி விட்டாரா.? அதனால் தான் நான் கூட நாளைக்கு பப்லு மாதிரி பண்ணலாம் என பலரும் கருத்துக்களை பதிவு செய்துவருவதை பார்க்க முடிகிறது.