இனி அட்லீ சரிப்பட்டு வரமாட்டார்… அட்லீயை கழட்டிவிட்ட விஜய்…. பின்னனி காரணம் இது தானாம்..

0
Follow on Google News

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார், அதில் மூன்று படங்கள் நடிகர் விஜய் நடித்த படங்கள். தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அதேபோன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

லியோ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அட்லி இயக்கும் ஜவான், விஜய் நடிக்கும் லியோ படம், இந்த இரண்டு படங்களிலும் இருவரும் முடித்துவிட்டு விஜய் 68 படத்தில் அட்லி மற்றும் விஜய் இருவரும் மீண்டும் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை சன் பிக்ச்சர் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை பேசி முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் விஜய் – அட்லீ இனையும் படம் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்பொழுது அட்லீயை கழட்டிவிட்டுள்ளார் விஜய். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் வாரிசு படம் மூலம் ஓரளவு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் விஜய்க்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சின்மா திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது, இந்த படத்தின் இயக்குனர் கோபிசந்த் மாலினேனி சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு அச்டின் கதையை தெரிவித்துள்ளார், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போக உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதமும் தெரிவித்துள்ளார்.

விஜய் பேன் இந்தியா ஸ்டராக உருவெடுக்க விரும்புவதால் தான் பிற மொழி இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு , தமிழ் என இரண்டு மொழிகளிலும் தன்னுடைய படம் மிக பெரிய வசூல் சாதனை அடையும் பட்சத்தில் விஜய் சம்பளமும் மேலும் பல மடங்கு அதிகரிக்கும், தற்பொழுது இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் ஷாருகான் 200 கோடி வாங்கி முதல் இடத்தில் உள்ளார்.

அடுத்ததாக 150 கோடி சம்பளம் வாங்கி பிரபாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்பொழுது விஜய் நடிக்க இருக்கும் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கும் படத்திற்கு விஜய்க்கு 135 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் விஜய் அடுத்தடுத்து மேலும் உயர வேண்டும் என்றால் அவர் பேன் இந்தியா ஸ்டாராக மாற வேண்டும், அதற்கு அட்லீ சரிப்பட்டு வரமாட்டார் என முடிவு செய்த விஜய் ஏற்கனவே கமிட்டாகி இந்தநிலையில் அட்லீயை தற்பொழுது கழட்டி விட்டுள்ளார்.

இந்நிலையில் விஜய் – கோபிசந்த் மாலினேனி இணையும் படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்.பி சௌத்ரி தற்பொழுது தமிழ் படங்கள் தயாரிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மோவிஸ் உடன் இணைந்து விஜய் – கோபிசந்த் மாலினேனி இணையும் பேன் இந்தியா படத்தை தயாரிக்கிறார் ஆர்.பி.சௌத்ரி.

இதை உறுதி செய்யும் வகையில், ஆர்.பி.சௌத்ரி மகன் நடிகர் ஜித்தன் ரமேஷ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை நாங்கள் தான் தயாரிக்கிறோம் என பேசியிருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் சன் பிக்சர் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது என நம்பக தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.