கமல்ஹாசனுக்கு தரமான ஆப்பு வைத்த ஆர்யா…யாருகிட்ட உன் சேட்டையை காட்டுகிறாய்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் விஸ்வரூபம் பாகம் இரண்டு.இதன் பின்பு இதுவரை எந்த ஒரு படமும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவில்லை, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் பார்ட் 2 படம் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நின்றது. இதன் பின்பு தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கையில். விக்ரம் 2 படத்திற்கு மிகுத்த எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசியல் கட்சி தொடங்கி ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை என்பதால் தற்பொழுது அரசியல் குறித்து பெரும்பாலும் கமல்ஹாசன் ஏதும் கருத்து தெரிவிப்பதில்லை. மேலும் கடும் கடன் சுமையால் தவித்து வரும் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் அதிகம் படம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். சொந்த தயாரிப்பு மூலம் வரும் லாபத்தில் கடனை அடைந்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன்.

தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடன் தன்னுடைய வயது முதிர்வு காரணமாக, இனி படத்தில் தான் நடிப்பது கடினம் என்றும், மேலும் இயக்குனர்களின் கதை பிடித்திருந்தால் அந்த படத்தை தனது சொந்த தயாரிப்பில் வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கலாம் என அதற்கான வேலைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இயக்குனர் முத்தையா ஒரு கிராமத்து கதை ஒன்றை கமல்ஹாசனிடம் தெரிவித்து, இதில் நீங்க நடித்தால் விருமாண்டி, தேவர்மகன் போன்று அருமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கமல்ஹாசன் தன்னுடைய உடல்நலம் காரணமாக தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என தெரிவித்தவர், மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யாவை நடிக்க வைக்கலாம், தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார். உடனே நடிகர் ஆர்யாவுக்கு இந்த படத்தில் 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு படத்துக்கான அடுத்த பணிகளை தொடங்க இயக்குனர் முத்தையாவை வலியுறுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

ஆனால் ஆர்யா இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க வேண்டாம், தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கட்டும் என இயக்குனர் முத்தையாவிடம் தெரிவிக்க. இந்த தகவலை கமல்ஹாசன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் முத்தையா, உடனே இந்த படத்தில் ஆர்யாவுக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து எடுத்து கொள்ளலாம், என முத்தையாவிடம் தெரிவித்த கமல்ஹாசன்,இது குறித்து நடிகர் விஜய் சேதுபதியிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

தன்னை முத்தையா இயக்கும் புதிய படத்தில் இருந்து துக்கப்போவதை அறிந்த ஆர்யா, உடனே தற்பொழுது அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகும் யானை படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி, கமல்ஹாசன் பேசிய சம்பளத்தை விட அதிகம் சம்பளம் இயக்குனர் முத்தையாவுக்கு தருவதாகவும், மேலும் தன்னுடைய சம்பளத்தையும் கமல்ஹாசன் தருவதை விட அதிகமாக பேசி, தற்பொழுது தயாரிப்பாளரை மாற்றியுள்ளார் ஆர்யா.

இதனை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தை கமல்ஹாசனுக்கு பதில் வேறு ஒரு தயாரிப்பாளருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தேடி வாய்ப்பு கொடுத்த கமல்ஹாசனுக்கே தரமான ஆப்பு வைத்துள்ள நடிகர் ஆர்யாவின் இந்த செயலால், சினிமா வட்டாரத்தில் அவர் மீது இருந்த நம்பிக்கையை இழந்துள்ளார் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

நீயெல்லாம் சோறு தான் சாப்புடுறீயா.? சிம்புவை வெளுத்து வாங்கிய ஹரி…எதற்கு தெரியுமா.?