நண்பனுக்குநம்பிக்கை துரோகம் செய்த ஆர்யா… நண்பன் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா.?

0
Follow on Google News

சைவம் படத்தில் நடித்த ரவி என்பவர், அந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே செம ரீச் ஆனார். அதன் பிறகு இவரின் அருமையான நடிப்பு திறமையால் பல சீரியல்களில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், கதாநாயகனின் அப்பாவாக நடித்து இன்னும் பிரபலமடைந்தார்.

இப்படி பல சீரியல்களில் இவர் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமாவிலும், ஒரு சில குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசிய சைவம் ரவி, நடிகர் ஆர்யாவின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியுள்ளார். அதோடு இறுதியில் ஆர்யா செய்த செயல் தான் மிகப்பெரிய ட்விஷ்டாகவும் ஆகவும் அமைந்திருக்கிறது.

சைவம் ரவி ஒரு ஷாப் வைத்திருந்திருக்கிறார். அந்த ஷாப்பிற்கு நடிகர் ஆர்யாவும் அடிக்கடி வந்திருக்கிறார். அப்போது ஒரு நாள் ஆர்யா, நான் இனி தினமும் இங்கே வருகிறேன், அதனால் ஒரு அக்கவுண்ட் போட்டுக்கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு சைவம் ரவியும், இவர் பார்க்க பெரிய இடத்து பையன் போல இருக்கிறாரே, அதனால் சரியாக காசு தந்து விடுவார் என்று சொல்லி ஷாப்பில் இருந்த பையனிடம், ஆர்யா பெயரில் ஒரு நோட்டு போடு என்று சொல்லி இருக்கிறார்.

நாட்கள் செல்ல செல்ல பக்கங்கள் கூடிக்கொண்டே போனதால், இவர் அந்த ஷாப் பையனிடம், எத்தனை பக்கம் போயிருக்கிறது என்று கேட்டபோது, அவர் ஒரு நோட்டு முடிந்து, இரண்டாவது நோட் வந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார். இதனால் இவர் ஆர்யாவிடம் பணம் கேட்க தொடங்கியிருக்கிறார். அப்போதெல்லாம் ஆர்யா, நமக்குள் என்ன பண பாகுபாடு, பார்த்துக் கொள்ளலாம் என்று ஜாலியாக, அவர் நடித்த நண்பேன்டா திரைப்படத்தில் எப்படி நண்பேன்டா என்று சொல்லிக் கொண்டு போவாரோ அதுபோல தான் ரவியின் வாழ்க்கையிலும் விளையாடியிருக்கிறார்.

மேலும் பேசிய ரவி. ஆர்யா பல ஷோரூம் கடைகளை திறந்து வைத்திருக்கிறார். ஆனால் ஆர்யாவால் நான் என்னுடைய ஷாப்பை மூடிவிட்டேன். ஆர்யா எனக்கு மூன்று நோட்டுக்கு மேலாக கடன் தர வேண்டியிருக்கிறது. இப்ப வரைக்கும் அந்த கடன் எனக்கு தரவில்லை என ஒரே போடாக பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார். அதோடு இவர், ஆர்யாவிடம் பணம் கேட்டு சூட்டிங் நடக்கும் இடத்திற்கும் சென்றிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் பணம் தரேன் என்று சொல்லி டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார். அப்போது இவர் மதராசபட்டினம் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில், ஆர்யாவும் இயக்குனர் ஏ எல் விஜயும் பேசிக் கொண்டிருந்த போது ஆர்யா பக்கத்தில் போய் நிற்க, ஏஎல் விஜயிடம், ஆர்யா, ரவியை அறிமுகப்படுத்தி, இவருக்கு ஒரு கேரக்டர் கொடுங்க என்று சொல்ல, விஜய்யும் அந்த படத்தில் இவருக்கு கேரக்டர் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார்.

ஆனால் அதற்கு பிறகு தான் விஜய் அவரை அழைத்து, சைவம் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததால், அந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பையும், புகழையும் பெற்று தந்தது. இதனால் ஆர்யா கடன் பாக்கியைத் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தாலும், அவரால் தான் நான் என்னுடைய ஷாப்பை மூடினேன், ஆனால் அவரால் எனக்கு ஏ எல் விஜயின் அறிமுகம் கிடைத்தது. அதனால் நான் இன்று சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆர்யாவை விமர்சிப்பது போலும் விமர்சித்து, சைவம் ரவி புகழ்ந்தும் பேசி இருக்கிறார்.