கமல்ஹாசனுக்கு ஆப்பு வைக்க நினைத்து நடு தெருவில் நிற்கும் ஆர்யா..! இருவருக்கும் நடந்த மோதல் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்கிற படத்தில் நடித்து வருகிறது, இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே, இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், காளிதாஸ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் பேன் இந்தியா படம் போன்று அணைத்து மொழிகளிலும் படமாக்கப்படுகிறது என தகவல் வெளியாகிறது. இந்த படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

விக்ரம் படத்தை தவிர்த்து நடிகர் கமல்ஹாசன் வேறு எந்த ஒரு படத்திலும் இதுவரை அவர் கமிட் ஆகவில்லை. மேலும் தற்பொழுது வயது முதிர்வு காரணமாக படத்தில் நடிப்பதை குறைத்து கொண்டு அதிகமாக படங்களை தயாரிக்கும் முடிவில் இறங்கியுள்ள கமல்ஹாசன், அவருக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்னஷனல் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் முத்தையா ஒரு கிராமிய கதை ஒன்றை கமல்ஹாசனை சாந்தித்து தெரிவித்துள்ளார்.

படத்தின் கதை தேவர்மகன், விருமாண்டி சாயலில் கிராமத்து கதை என்பதால்,கதை மிகவும் கமல்ஹாசனுக்கு பிடித்து போய் விட்டது. ஆனால் தற்போது வயது முதிர்வு காரணமாக இந்த படத்தில் நான் நடித்தால் சரியாக இருக்காது என தெரிவித்த கமல்ஹாசன், வேறு ஒரு இளம் நடிகரை வைத்து இந்த படத்தில் நடிக்க வைத்து தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்னஷனல் தயாரிப்பில் இந்த படத்தை தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இதன் பின்பு நடிகர் ஆர்யாவை அழைத்து பேசிய நடிகர் கமலஹாசன் இந்த படத்திற்காக 15 கோடி வரை சம்பளம் பேசி ஓகே செய்துள்ளார், நடிகர் ஆர்யாவுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.ஆனால் இதில் கிராமத்து கதையில் ஆர்யா செட்டாக மாட்டார் என முத்தையா தெரிவிக்க, இருந்தும் கமல்ஹாசன் வற்புறுத்தலின் காரணமாக ஒப்புக்கொண்டார் முத்தையா. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் புதிய படத்திற்கான கூட்டணி உறுதியானது.

இதன் பின்பு ஆர்யாவை தனியாக அழைத்து பேசியுள்ளார் இந்த படம் குறித்து பேசியுள்ளார். அப்போது இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்க வேண்டாம். நான் ஒரு தயாரிப்பாளரை உங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறேன். என்னுடைய நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால் என்னைச் சார்ந்த ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார், அவர் இந்த படத்தை தயாரிக்கட்டும் என்று இயக்குனர் முத்தையாவிடம் தெரிவித்துள்ளார் ஆர்யா.

ஏற்கனவே இந்த படத்தில் ஆர்யா நடிப்பதில் விருப்பம் இல்லாமல் அரை மனதுடன் ஏற்று கொண்ட முத்தையா, இந்த தகவலை கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்ட உடனே கமல்ஹாசன் செம டென்ஷன் ஆகி உள்ளார், வேறு தயாரிப்பாளரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்றால், பின்பு நான் எதற்கு என்று கோபமாக முத்தையா விடும் பேசியவர். உடனே ஆர்யாவை அந்த படத்தில் இருந்து தூக்கி விடுங்க என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தை நடிகர் விஜய்சேதுபதி சேதுபதியை வைத்து எடுத்துக் கொள்வோம் என்று கமல்ஹாசன் முத்தையாவின் தெரிவித்துள்ளார். இதன் பின்பு முத்தையா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னை தேடி அழைத்து அருமையான வாய்ப்பை கொடுத்த கமல்ஹாசனுக்கு ஆப்பு வைக்க நினைத்து தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட நடிகர் ஆர்யா, புதிய படங்களில் நடிக்க நல்ல கதையில்லாமல் சினிமா வாய்ப்புக்காக நாடு ரோட்டில் நிற்கும் நிலையில் உள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீ யாருய்யா எனக்கு சான்ஸ் கொடுக்க… ரஜினியிடம் திமிரை காட்டிய நெல்சன்..! என்ன நடந்தது தெரியுமா.?