அவர் போகட்டும் எனக்கென்ன… இளையராஜாவை பொருட்டாகவே கருதாத அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அரவிந்த்சாமியின் தந்தையார் மிகப்பெரிய தொழில் அதிபர். அவருடைய தாயார் பரதநாட்டிய கலைஞர். மிகப்பெரிய கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்த அரவிந்த்சாமி, ஆரம்பத்தில் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. தன்னுடைய மருத்துவர் கனவை கைவிட்டு விட்டு லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த அரவிந்த்சாமி கல்லூரியில் படிக்கும் போதே விலை உயர்ந்த காரில் வருவது , சிகரெட் அடிப்பது என நண்பர்களுடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார்.

பொதுவாகவே ஒரு கோடீஸ்வரர் பிள்ளை எப்படி இயல்பாக வளருமோ, அதே போன்று வளர்ந்துள்ளார் அரவிந்த்சாமி, அதே நேரத்தில் என்ன தான் கோடீஸ்வரர் வீட்டில் அரவிந்த் சாமி பிறந்து இருந்தாலும், அனைவரிடமும் எந்த ஒரு தலைக்கணமும் இல்லாமல், ஆணவம் இல்லாமல் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் மாடலிங் துறையில் நுழைந்த அரவிந்த்சாமி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

அப்படி அரவிந்த்சாமி நடித்த விளம்பர படம் மணிரத்தினம் பார்வையில் பட, தளபதி படத்தில் அரவிந்த் சாமியை நடிகராக அறிமுகப்படுத்தினார் மணிரத்தினம், அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் நடித்து மிகப் பெரிய உச்சத்திற்கு சென்றார் அரவிந்த்சாமி. 90 காலக்கட்டத்தில் அதிக பெண்கள் ரசிகைகளை கொண்ட நடிகராக திகழ்ந்து வந்தவர் அரவிந்த் சாமி.

பொதுவா சினிமா துறையினர் மூத்த இயக்குனர்கள் மற்றும் மூத்த நடிகர்கள் போன்றவர்கள் முன்னிலையில் அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், எழுந்து நிற்பது அவர்கள் முன்னால் புகை பிடிக்காமல் இருப்பது என மரியாதைக்காக பல விஷயங்களை செய்து கொள்வார்கள். சிகரெட் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏதாவது மூத்த நடிகர்கள் இயக்குனர்கள் அது வழியாக வந்தால் வந்தால் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு அனைத்தும் விடுவார்கள்.

ஆனால் நடிகர் அரவிந்த் சாமி, சினிமா உலகத்திற்குள் வந்த பின்பும் கூட தன்னுடைய இயல்பான நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் மாற்றமில்லாமல், வெளியில் எப்படி கோடீஸ்வர பிள்ளையாக நடந்து கொண்டாரா.? அதே போன்று சினிமா துறையினர் மத்தியிலயும் நடந்து கொண்டுள்ளார் அரவிந்த்சாமி. அதாவது இடத்திற்கு தகுந்த மாதிரி நடிக்கமால் இயல்பாகவே இருந்து வந்துள்ளார் அரவிந்த் சாமி.

அந்த விதத்தில் ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் கையில் சிகரெட் உடன் அரவிந்த்சாமி புகைபிடித்து கொண்டிருந்த பொழுது அந்த வழியாக இளையராஜா வருகிறார், அந்த இடமே பரபரப்பாக இளையராஜாவை பார்த்து எழுந்து நிற்க்க, ஆனால் எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இயல்பாக சிகரெட்டை ஊதி புகையை வெளியில் தள்ளி கொண்டு இருந்துள்ளார் அரவிந்த் சாமி.

சிலர் அரவிந்த்சாமி அருகில் ஓடி வந்து இளையராஜா சார் போகிறார், ஏன் இது மாதிரி அவர் முன்னால் சிகரெட் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்க அதற்கு அரவிந்த்சாமி, அவர் போகட்டும், நான் சிகெரெட் அடிப்பது இயல்பு, நான் அவருக்கு எங்க அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த இடத்தில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.தற்போது படப்பிடிப்பு தளத்தில் தானே இருக்கின்றேன் என ரொம்ப கேஷுவலா அரவிந்த்சாமி சிகரெட் கையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தை இளையராஜாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல். எதுக்குப்பா அவரிடம் வந்து இதெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க , அவர் அவருடைய இயல்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறார் என இளையராஜாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று விட்டார் என சினிமா துறையை சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.