அஜித் மனைவிக்கு கர்ப்பை பிரட்சனை… ஷாலினி இப்ப எப்படி இருக்கார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை ஷாலினி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதே சமயம் மகன் ஆத்விக் மருத்துவமனையில் பெட்ரெஸ்ட் இருக்கும் தாய் ஷாலினிக்கு நெத்தியில் முத்தம் தரும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. திடீரென ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியானதால் அஜித்-ஷாலினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், ஷாலினிக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்தும், அஜித் ஷாலினி தம்பதியரின் காதல் குறித்தும் பல்வேறு தகவல்களை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான தம்பதிகள் என்றால் அஜித் ஷாலினி ஜோடி தான். ஏனெனில் இவர்களுக்கு திருமணம் ஆகி 25 வருடங்களை கடந்த பின்பும் இவர்கள் பற்றி எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்களும் வதந்திகளோ வந்தது இல்லை.

அந்த அளவிற்கு நடிகர் அஜித் குடும்பத்தையும் சினிமாவையும் சரி சமமாக பார்த்து வருவதாக சபிதா ஜோசப் கூறியுள்ளார். மேலும் அவர் அஜித் பற்றி கூறும் போது, அஜித் வீட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொரு ஊழியர்க்கும் அவரது சொந்த காசிலேயே இன்சூரன்ஸ் கட்டி வருவதாகவும், அவர்களுக்கு தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்திருப்பதாகவும் சபிதா குறிப்பிட்டுள்ளார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அஜித் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் போகக் கூடியவர் என்றாலும், அவருடைய அவனுக்காக டயர் எல்லாம் ஓட்டி விளையாடியிருக்கிறார். தான் ஒரு சினிமா பிரபலம் என்ற அகம்பாவம் அஜித்திடம் எப்போதும் இருந்ததில்லை. அவரைப் பொறுத்தவரை மக்களில் ஒருவராக இருக்கத்தான் விரும்புகிறார். ஆனால் மக்கள் தான் அவரை பில்டப் செய்து ஒதுக்கி வைத்திருக்கின்றனர் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அஜித் -ஷாலினி இடையேயான காதல் குறித்து பேசிய சபிதா, திருமணமாகி இத்தனை வருடங்களுக்கு பிறகும் இருவரிடையேயான காதல் இன்றும் அப்படியே இளமையாக இருக்கிறது என்று கூறினார். இது பற்றி சபிதா கூறும்போது, “நடிகர் அஜித் திருமணத்திற்கு பிறகு ஷாலினிக்காக நிறைய விஷயங்களை மாற்றி இருக்கிறார். இன்று வரை ஷாலினியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் சர்ப்ரைஸ் செய்து ஆச்சரியப்படுத்துகிறார்.

மேலும் திருமண நாளின் போது ஷாலினியுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார். அதேபோல ஷாலினியும் அஜித் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருக்கிறார். அஜித்தின் இந்த வருட பிறந்தநாளுக்கு கூட அவருக்கு டுகாட்டி பைக்கை ஷாலினி பரிசளித்திருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகியது.இவ்வாறு அஜித் ஷாலினி தம்பதி ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு நம்மில் பலரையும் வியக்க வைக்கிறது.

சமீபத்தில் ஷாலினி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட அஜித் அவர் பக்கத்திலேயே இருந்து அக்கறையாக கவனித்துக் கொண்டார். மருத்துவமனையில் ஷாலினிக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? அவருக்கு என்ன ஆச்சு என்று அஜித் ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஷாலினிக்கு கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும், கர்ப்பப்பை தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்ததாகவும் இனி அவர் முழுமையாக வெற்றி ஸ்டில் தான் இருக்க வேண்டும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது” என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மனைவி ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கண் கலங்கிய அஜித் குமார் அவர் அருகிலே இருந்து கவனித்து கொண்டதாக கூறப்படுகிறது.