கடும் இழுபறியில் அஜித்தின் விடாமுயற்சி… ஷூட்டிங் தொடங்குமா.? தொடங்கப்படாதா.?

0
Follow on Google News

கோலிவுட்டின் தயாரிப்பு நிறுவனங்களில் இப்போது முன்னணியில் இருப்பது லைகா நிறுவனம். அந்த நிறுவனம் தமிழில் பல படங்களை தயாரித்துவருகிறது. விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் இரண்டாவது முறையாக இணைந்த கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமடைந்தது. கத்தி படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், 2.0 போன்ற பல படங்களை தயாரித்தது.

இந்தச் சூழலில் எம்ஜிஆர், கமல் ஹாசன் ஆகியோர் முயன்று முடியாத பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்கத்தில் தயாரித்தது லைகா நிறுவனம். தயாரித்ததோடு மட்டுமின்றி அதற்கான புரோமோஷன்களிலும் ரொம்பவே தீவிரமாக செயல்பட்டது. ஆனால் முதல் பாகம் பெற்ற வசூல் 500 கோடி ரூபாயை தாண்டியிருந்த சூழலில் பொன்னிய்ன் செல்வன் இரண்டாம் பாகம் 1000 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைய இருக்கும் நிலையில் 500 கோடி ரூபாயை தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் லைகா நிறுவனம் கொஞ்சம் அப்செட் என்ற பேச்சும் எழுந்தது.
லைகா நிறுவனம் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தை தயாரித்துவருகிறது. இதில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் லைக்கா தயாரிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, சந்திரமுகி 2 ஆகிய இரண்டாம் பாக படங்கள் ரிலீஸ் ஆக ரெடியாக இருக்கின்றன.

அதுமட்டுமின்றி ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தையும் லைகா தயாரிக்க இருக்கிறது. இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் சர்வானந்த் ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படி அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வரும் லைக்காவுக்கு இழுபறியாக இருப்பது நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் தான். அஜித், தற்போது தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார், அனிருத் இசையமைக்கவுள்ளார்.

அதேநேரம் இதுவரை விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் -மகிழ்திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதோடு சரி. தொடர்ந்து சூட்டிங் குறித்த எந்த அறிவிப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் ரசிகர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஏகே62 படம் சரியான நேரத்தில் சூட்டிங் துவங்கப்பட்டிருந்தால் தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில் இன்னும் படத்தின் சூட்டிங்கே துவங்கப்படவில்லை. குறைந்தபட்சம் அறிவிப்புகூட வெளியாகவில்லை. இப்படி விடாமுயற்சி எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் அப்படியே இருக்கும் இந்த நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் படம் ஒன்றினை லைக்கா நிறுவனம் இயக்க உள்ளது.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். லூசிபர் படத்துக்குக் கிடைத்த வெற்றியை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாவதாக இருந்த லூசிபர் 2 திரைப்படம் தொடங்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது லூசிபர் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கப்படுவதாகவும், அந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.