கிழிந்தது அஜித் முகத்திரை… புட்டு புட்டு வைத்த சிவகார்த்திகேயன்.. அஜித் இப்படி பட்டவரா.?

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அமரன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அளவில் சாதுரியமாக கையாண்டு விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித்தை சந்தித்து தான் பேசியதாக ஒரு கருத்தை பதிவு செய்தார், அதேபோன்று கமலஹாசனுக்கு பாராட்டு, அது மட்டும் இல்லாமல் ரஜினியை புகழ்ந்து பேசியது, மேலும் கோட் படத்தில் விஜய் கொடுத்த துப்பாக்கி என்னிடம் தான் இருக்கிறது என்கின்ற ஒரு பேச்சு.

இப்படி சீனியர் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், கமல், ரஜினி ரசிகர்களை கவரும் வகையில் சிவகார்த்திகேயன் பேசி சாதுரியமாக அவர்களின் ரசிகர்களை தன் பக்கம் திருப்புவதற்கு முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே அஜித் பெரும்பாலும் தன்னை சுற்றி ஒரு வட்டம் அமைத்து சக சினிமா துறையைச் சார்ந்தவர்களிடமே நெருங்கி பழகாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் அஜித் குறித்து அமரன் பட மேடையில் பேசி பேச்சு ஒன்று அஜித் இப்படி பட்டவரா.? என்று சொல்லும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் மேலும் அஜித் தன்னுடைய வட்டத்தை விரிவுபடுத்தி இன்னும் சக சினிமா துறையினரிடம் இருந்து விலகி நெருங்க முடியாத தூரத்திற்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது சிவகார்த்திகேயனின் இந்த அமரன் படத்தின் மேடைப் பேச்சு.

பொதுவாகவே சினிமா துறையில் நடிகர் அஜித் மீது அனைவருக்குமே ஒரு நல்ல மதிப்பு மரியாதையும் உண்டு. காரணம் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அவர் மற்றவர்கள் விவாகரத்தில் தலையிட மாட்டார் என்கின்ற ஒரு பிம்பம் இதுவரை இருந்து வந்த நிலையில், அந்த பிம்பத்தை சுக்குநூற உடைக்கும் வகையில் அமைந்துவிட்டது சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மேடை பேச்சு.

சிவகார்த்திகேயன் அஜித்தை சந்தித்திருக்கிறார் அப்போது அஜித் welcome to big leak என சிவகார்த்திகேயனை வரவேற்றுள்ளார் அஜித். இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பிக் லீக் என்றால் என்னவென்று தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்திடமே நேரடியாக சிவகார்த்திகேயன், சார் பிக் லீக் என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் எப்போது உங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்களோ அப்போதே நீங்கள் இந்த பிக் லீக் உள்ளே வந்து விட்டீர்கள் என்று அஜித் தெரிவித்ததாக சிவகார்த்திகேயன் மேடையில் பேசினார்.

அதாவது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து பலரும் பொறாமை ப்படுகிறார்கள் என்கின்ற வகையில் அஜித் சிவகார்த்திகேயனிடம் பேசிய இந்த பேச்சு அமைந்துள்ளது என்றும், அந்த வகையில் தற்போதைய சினிமா காலகட்டத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. அவரவர்களின் உழைப்பு அவரவர்களின் வெற்றி.

அந்த வகையில் சிவகார்த்திகேயனை பார்த்து யார் பொறாமை படுகிறார்கள் என்பதை யாரையோ அஜித் மனதில் வைத்து தான் இதை சிவகார்த்திகேயனிடம் சொல்லி இருக்க வேண்டும் என்கின்ற விவாதம் தற்பொழுது எழுந்துள்ள நிலையில், அஜித் அப்படி யாரை மனதில் வைத்து சிவகார்த்திகேயனை பார்த்து பொறாமை படக் கூடியவர்கள் என்று சொல்லி இருப்பார் என்று அஜித்திடம் தான் கேட்க வேண்டும்.

அவர்தான் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அஜித் பொதுவாகவே புறம் பேசக்கூடியவர் கிடையாது, அந்த ஆனால் சிவகார்த்திகேயன் தான் அஜித்தை சந்தித்து பேசியது குறித்து மேடையில் பேசிய இந்த பேச்சை வைத்து பார்க்கும் பொழுது அஜித்தும் புறம் பேசக்கூடிய தான் என்கின்ற ஒரு கருத்து நிலை வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here