அஜித்துக்கு நடக்க இருக்கும் ஆப்ரேசன்.. கடைசி படம் இது தான்.. அஜித் மூலையில் என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு குட்டி சுவற்றை எட்டிப் பார்த்தால் உசுரை கொடுக்க கோடி பேர் என, உலகளவில் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், அஜித்துக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்பதால் இவரை அடிக்கடி பொதுவெளியில் பார்ப்பதே ரசிகர்களுக்கு பெரும் சவாலாக தான் இருக்கும்.

இந்நிலையில்தான் பொது இடங்களில் பார்க்க முடியாத அஜித்தை படத்திலாவது தலைவன் தரிசனம் கிடைக்கும் என நிம்மதியில் இருந்த ரசிகர்களுக்கு, இனிமேல் அஜித் படத்தில் நடிக்க மாட்டார், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடக்கப்போகிறது என்ற பகீர் தகவல் ஒன்று வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் விஜய் தான் இனி படத்தில் நடிக்க மாட்டேன் என அரசியலில் குதித்தார் என்று பார்த்தால், தற்போது நடிகர் அஜித்தும் இனி படத்தில் நடிக்க மாட்டாரா என்றும், நடிகர் அஜித்துக்கு இதுதான் கடைசி படமா என ரசிகர்கள் அனைவரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

உண்மையில் அஜித்துக்கு என்ன தான் பிரச்சனை என்பதை பார்ப்போம். நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் இவர் எப்போது நடிக்க ஆரம்பித்ததாரோ, அப்போதில் இருந்தே நடிகர் அஜித் ஆபரேஷன் மேல் ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறார். அதோடு கடத்த மாதம் தான் அவரின் மனைவியான ஷாலினிக்கும் ஆப்ரேஷன் நடந்து முடிந்தது. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கிய சில மாதங்கள் கழித்து, நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அப்போது அது ரெகுலர் செக்கப் தான் என கூறப்பட்டது. ஆனால் அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், தண்டுவட பகுதியில் பிரச்சனை இருப்பதாகவும், அதனால் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் எங்கள் தலைக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

பிறகு அஜித்தின் மேலாளர், மூளையில் கட்டி இருப்பதாக கூறியது உண்மையில்லை, அவரது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் உள்ளதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார். இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த பின் அஜித் முழு ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அடுத்த நாளே அவரது மகன் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சர்ஜரி செய்து முடிந்த அடுத்த நாளே அஜித் வெளியே வந்து ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறாரே என அதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் தான் அந்த ஆபரேஷனில் இருந்து மீண்ட அஜித், தற்போது மற்றும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் ஏற்கனவே செய்த ஆபரேஷன், அப்போது ஒரு அவசரத்துக்காக செய்தது என்றும், அதில் அவர் பூரண குணம் அடையவில்லை, அந்த சர்ஜரியின் தொடர்ச்சி தான் இந்த அறுவை சிகிச்சை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித், ஏற்கனவே, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருவதால், இந்த படத்தை முடித்த பின்பு தான் அறுவை சிகிச்சை செய்வேன் என கூறியிருக்கிறார். இதனால் குட் பேட் அக்லி தான் அஜித்தின் கடைசி படம் என சொல்லப்பட்டது. மேலும் இவர் சிறுத்தை சிவா உடன் ஒரு கமிட்மென்ட் மற்றும், மோகன் ராஜாவுடன் இன்னொரு கமிட்மென்ட் என அடுத்தடுத்த படங்களையும் புக் செய்து வைத்திருந்த நிலையில், இவர் ஆபரேஷனை முடித்துவிட்டு ஒரு வருடம் கழித்து இந்த படங்களில் நடிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் இதைக் கேட்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். அதாவது இனிமேல் அஜித் படத்திலேயே நடிக்க மாட்டாரா என்று கவலையில் இருந்த ரசிகர்களுக்கு, அஜித் ஆபரேஷன் முடிந்த ஒரு வருடம் மட்டுமே படத்தில் நடிக்காமல் ரெஸ்ட் எடுக்க போகிறார், பிறகு மீண்டும் படத்தில் நடிப்பார் என்ற செய்தி மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு அஜித் ரசிகர்கள் ஆப்ரேஷன் எல்லாம் முடித்துவிட்டு சீக்கிரம் மீண்டு, நடிக்க வரவேண்டும் என அஜித்திற்காக ஆங்காங்கே பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.